Saturday 12 June, 2010

காக்க…காக்க…

சம்பவம் 1



இடம்:சோழங்கநல்லூர் சந்திப்பு.
நாள்: ஒரு திங்கட்கிழமை
அது நான் நாவலூர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம். அப்பொழுதெல்லாம் நானும் எனது மதுரைக்கார நண்பனும் அவனது 'splendor +'ல் தான் அலுவலகம் போவோம்.காலையில் நான் ஓட்டிப்போவேன், மாலையில் அவன் ஓட்டி வருவான்.(பெட்ரோல் அவனே போட்டுப்பான். பாசக்கார பய)
அன்றும் அப்படிதான் அலுவலகம் போய்க்கொண்டிருந்தோம். சோழங்கநல்லூரில் புதிதாக சிக்னல் பொருத்தப்பட்ட நேரம்.
ECR link road OMRல் இணையும் இடம். தினமும் அந்த வழியேதான் வருவோம். அன்றுதான் சிக்னல் workஆக ஆரம்பித்து இருந்தது.
சிக்னலில் சிகப்பு. அதனால் அது Free left ஆ இல்லையா என்பதில் எனக்கு குழப்பம்.
உடனே நான் பின்னாலிருந்த நண்பனிடம்" டே இது Free leftஆ இல்லயா?" எனக் கேட்டது அவன் காதில் விழுந்ததோ இல்லயோ. அங்கிருந்த கான்ஸ்டபில் காதில் நன்றாகவே விழுந்தது.
(ஆஹா. சிக்கிட்டானுங்க அடிமைங்க)
நான் வண்டியை நிறுத்திதான் நண்பனிடம் கேட்டுக்கொண்டு இருந்தேன். அவன் " Free leftதான் டா. யேன் நிறுத்துற? விடு போலாம்" என்றான்.
அதற்குள் கேப்டன் தேவாரம்(கான்ஸ்டபில்) வந்துவிட்டார்.
"அதான் சிக்னல் போட்டு இருக்குள்ள. எங்க போற நீ?"
 நண்பன்: "சார் இது Free left தானே?"
தேவாரம்: "என்ன நீ ரூல்ஸ் லாம் பேசுறே? வண்டிய ஓரங்கட்டு"(மாட்னோம்டா மாப்ள)
ஓரங்கட்டினா அங்க வெள்ளையும் சொள்ளையுமா இன்னொருத்தர். (ஆபீசராமா!!!)*வண்டி யாருது? லைசென்ஸ் இருக்கா?
*பேப்பர்ஸ் இருக்கா? னு எல்லார்கிட்டயும் கேக்குற அதே கேள்விய கேட்டார்.
நானும் எல்லாம் கொடுத்தேன். வாங்கி வெச்சுகிட்டாரு.
"500ரூபா ஃபைன் கட்டிட்டு வாங்கிட்டு போ" என்றார்.
(நாட்டாமை… தீர்ப்ப மாத்து)
"சார் நாங்க போகல. Free leftஆ இல்லயானு நின்னு பேசிட்டு இருந்தோம். அவ்ளோதான்" என்றேன் நான்.
"அதெல்லாம் தெரியாது. நான் இன்ஸ்பெக்டர்க்கு சொல்லிட்றேன். நீங்க அவர் கிட்ட பேசிக்கோங்க"
என்று outgoingஏ போகாத Mobileல் பந்தாவாக நம்பர் டயல் செய்தார்.
அய்யய்யோ!! இருக்குற ரெண்டே இப்டி உயிர வாங்குதுங்க. இதுல பெரிய பூதம் வேற வரணுமா?
"சார் சார்! வேணாம் சார் ! வேணாம் சார்!" என பதுங்கினோம்.
"அப்டினா 100ரூபா கொடுத்துட்டு கெளம்புங்க" என மொய்க்கணக்கு எழுத சொன்னார்.(பக்கத்தில் இன்னொருவன் லைசென்ஸ் இல்லாமல் 200 ரூபாய் மொய் எழுதிக்கொண்டு இருந்தான்)
நாங்கள் யோசிப்பதற்குள், "நீங்க இன்ஸ்பெக்டர் கிட்டயே பேசிக்கோங்க பா" என மறுபடியும் "சென்னை-28 சிவா" ஸ்டைலில் மொபைலில் நம்பர் டயல் செய்தார்.
வேறு வழி இல்லாமல், 100 ரூபாயைய்க் கொடுத்தோம். (இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேன்?)
"சார் வெளியூர் பசங்க. சிக்னல் எப்டினு தெரியாமதான் இப்டி பன்னிட்டோம். பெட்ரோல் போட கூட காசு இல்ல சார்." என நண்பன் செண்டிமெண்டாக bittu போட.
ஆபீசரின் கல் மனதில் ஈரம் கசிந்து 50 ரூபாயை திருப்பி கொடுத்தார்.கடைசியாக கிளம்பும் போது "வெளியூர் பசங்க, எங்கயாவது மோதி அடி பட்டுட்டா? அப்புறம் உங்க அப்பா அம்மாக்கு யாருப்பா பதில் சொல்வா? அதுக்காகதான் நாங்க இப்டிலாம் உங்கள கண்ட்ரோல் பண்றோம்" என்றார். (புத்தி சொல்றாராமா!!!!)
அந்த இடத்தில்தான் தமிழக காவல்துறை தனது தனித்தன்மையைக் காட்டி நின்றது.

சம்பவம் 2

இடம்: சென்னை மத்திய புகைவண்டி நிலையம்(அட அதாங்க Chennai Central station

போன சம்பவத்துலயாவது Two wheelerல போய் சிக்னல (மதிச்சும்)மதிக்காமதானே மொய் எழுதினோம். இந்த சம்பவத்துல கொடுமைய கேளுங்களேன்… 
இந்த தடவ மொய் வெச்சது நான் இல்ல. என்னோட அரண்மனைத் தோழன்(Room mate).
அவனோட சொந்தக்காரங்க யாராவது சென்னை வந்தா கூட மொபைல்லயே பேசி வழியனுப்பி வைப்பான். அன்னைக்கு அவனோட Friend ஒருத்தவங்க 
( எந்த Friend(boy/gal)னு நான் சொல்ல மாட்டேன் பா) சென்னை வழியா ஈரோடு போனாங்க.(அவங்க சொந்த ஊரு நம்ம நட்பு மாநிலம் ஆந்திரா, படிச்சது ஈரோட்டுல. காலேஜ் முடிச்சு டிகிரி பட்டம் வாங்க வந்தாங்க)சரி போறதே போறோம், அப்டியே கடைசியா இவனையும் பார்த்துட்டு போலாமேனு ஸ்டேசன் வர சொன்னாங்க. 
Night 12.30 மணிக்குதான் train. அரண்மனைல இருந்து 10.30க்கு கெளம்பினான். திருவான்மியூர்ல இருந்து பஸ் பிடிச்சு 11.15கெல்லாம் central போயிட்டான். ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் இப்பவே எடுத்தா 1 மணி  நேரம்தானே அதுக்கு Validityனு சொல்லி 12மணி வரைக்கும் சுத்திட்டு அப்புறமா எடுத்தான்.
Trainம் ஒரு 15நிமிசம்தான் லேட்டாதான் வந்துச்சு. 

அவங்கள பார்த்து பேசிட்டு, (
ஈரோடுக்கு நீயும் வா போலாம்னு அவங்க compel பண்ணது, இவன் "அங்க வந்தா அப்புறம் நீ திரும்ப ஊருக்கு போகும்பொது நான் ரொம்ப கஷ்டப்படுவேன். அந்த கஷ்டத்த கொஞ்சமா இப்பவே பட்டுக்கறேன்"னு வந்த கண்ணீரையும், 'நீ வெளியவே நில்லு'னு ஸ்டேசனுக்கு வெளியவே நிறுத்தி வெச்சுட்டு, உள்ள போனது, அத பத்திலாம் நான் சொல்ல மாட்டேன் பா.) 

போகாதே… போகாதே… நீ பிரிந்தால் நான் இறப்பேன்..
எல்லாம் முடிஞ்சு அவங்கள (பிரிய முடியாம) வழியனுப்பி வெச்சுட்டு, ஸ்டேசன் விட்டு வெளிய வரும் போதுதான் சம்பவம் நடந்துச்சு. 

அங்க இருந்த கேப்டன் பிரபாகரன் இவனை கூப்பிட்டு செக் பண்ணியிருக்காரு. இவனும் கம்பெனி Id card, Platform ticket எல்லாம் காமிச்சு இருக்கான். இருந்தாலும் என்ன ப்ரயோஜனம்?(Id card எடுக்கும் போது உள்ள purseல இருந்த மஹாத்மா காந்தி படம் போட்ட பேப்பர பார்த்துட்டாரு) அவர் மொய் வாங்க  ப்ளான் போட்டுட்டாரு. 

அதனால" உன்னை பார்த்தா சந்தேகமா இருக்கு. நாளைக்கு ஸ்டேசன்ல வந்து கையெழுத்து போட்டுட்டு Id card வாங்கிக்கோனு" எடுத்து வெச்சுகிட்டார். (அவன் மீசை வெச்சாலாவது பெரிய பையன் மாதிரி இருப்பான். "நீ மீசை வைக்கலேனா அழகா இருக்கேனு", யாரோ சொல்லிட்டாங்கன்னு, மீசை வைக்காம இஸ்கூலு பையன் மாதிரி இருப்பான். 
அவன் தீவிரவாதியோனு கேப்டனுக்கு சந்தேகம்.என்ன கொடுமை சார் இது?)

மீசை வைக்கலனாலும் அவன் ஒரு small Terror. இருந்தாலும் அவர் ஒரு அரசாங்க அதிகாரி அப்பிடிங்கிற மரியாதைக்காக அமைதியா நின்னான். இவன் கூட இன்னொருத்தரையும் மொய் வாங்க பிடிச்சு வெச்சிருந்தாரு கேப்டன். எவ்வளவோ மறைமுகமா சொல்லி பார்த்தாரு கேப்டன். இவங்க மொய் வைக்கிற மாதிரி இல்ல. அதனால கடைசில அவரே," சரி இருக்குறத கொடுத்துட்டு கெளம்புங்க"னு சொல்லிட்டாரு. 

அரண்மனைத் தோழன் 200ரூபா வெச்சு இருந்தான். பக்கத்துல இருந்தவர் கிட்ட சின்ன நோட்டெல்லாம் இல்ல. ஒத்தையா ஒரே 500ரூபா தான் இருந்துச்சு. அரண்மனைத் தோழன் "சார் இந்த நேரத்துக்கு மேல பஸ் கூட இருக்காது. ஆட்டோல போக கூட காசு இல்ல"னு சொல்லி இருக்கான். அவரு தமிழ்நாடு போலீஸ் ஆச்சே. பொதுமக்களின் நண்பன். அதனால அரண்மனைத் தோழனுக்கு ஆட்டோவுக்காக 50ரூபா கொடுத்து, வழியனுப்பி வெச்சாரு.(இவர் அல்வா… ச்சி… அல்லவா நண்பர்)
கேப்டன் நண்பருக்கு டாடா சொல்லிவிட்டு ஆட்டோ பிடித்து சோகமாக அரண்மனை வந்து சேர்ந்தான் நண்பன்.
(
சோகத்துக்கு காரணம் கேப்டன் இல்லீங்க. ஈரோடு போய்கிட்டு இருக்கிறவங்கதான் காரணம்) 

சட்டை கிழிஞ்சிருந்தா தெச்சு உடுத்திக்கலாம்…
நெஞ்சு கிழிஞ்சிருக்கு, எங்க முறையிடலாம்?..

No comments:

Post a Comment