Sunday 21 March, 2010
Q…(க்யூ)..
பால்வாடி- அம்மா கொடுத்த 25 பைசாவுக்கு
1 - 3 வகுப்பு- 50 பைசாவுக்கு
4 - 5 வகுப்பு- 1 ரூபாய்க்கு
6 - 8 வகுப்பு- 5 ரூபாய்க்கு
9 - 10 வகுப்பு- 10 ரூபாயில்
11 - 12 வகுப்பு- 25 ரூபாயில்
கல்லூரி(சொர்க்கம்)- I.V, Treat, Symposium
Place ஆவதற்க்கு முன் Treat-க்கு தனம் மெஸ்,
இப்பொழுதெல்லாம்,
காரணம்- Debit/Credit card ஸ்வைப் செய்யும் வசதி இல்லை அங்கே.
Thursday 18 March, 2010
மூன்று கவிதைகள்...
“காதலர் தினம்”
அனைவருக்கும் பிப்ரவரி-14 காதலர் தினம்,
ஆனால் எனக்கு மட்டும்
என் அன்பை அவள் புரிந்து கொள்ளும் நாள் தான்-
" பிப்-14"…
முடியுமா????
"உன் மீது எனக்கு காதல் வரும் வரை காத்திருக்க முடியுமா?"
-என்று கேட்கிறாள் அவள்….
அவளைப் பார்க்கவே 23 வருடம் காத்திருந்த எனக்கு,
இது என்ன? -சாதாரணம்….
ஏன்???
"உன்னை பிடிச்சிருக்கு"
என்று இரண்டே நொடியில் எழுத முடிந்த எனக்கு,
அந்த கடிதத்தை அவளிடம் கொடுக்க மூன்று ஆண்டுகளாகியும்
தைரியம் வராதது ஏன்????
கல்பனா செல்லம்..
மற்றவர்களால் உண்டான மன கஷ்டங்கள்
உன்னுடன் விளையாடும் போது மறந்தேன்
நீ உண்டாக்கிய மன கஷ்டத்தை எப்படி மறப்பேனடி
உன்னுடன் விளையாடும் போது உன் நகங்கள் கீறி
உண்டான காயங்கள் வலிக்கவில்லை
நீ பிரிந்ததால் உண்டான காயம் வலிக்கிறதடி
உன்னை அள்ளி அணைக்கும் போது மெண்மை என்னவென்று உணர்ந்தேன்
என்னை நீ பிரிந்த போது கொடுமை என்னவென்று உணர்ந்தேனடி
இவ்வுலகில் எங்கோ, யாரோ உன்னை மகிழ்ச்சியாய் பார்த்து கொள்கிறார்கள்
என்ற நம்பிக்கையுடன் உயிர் வாழ்கிறேன்
உன் நினைவுகளுடன்
'என் வீட்டு செல்ல பூனைக்குட்டியே'
அவள் கண்கள்
முதலில் அவளது கண்களை கைது செய்ய சொல்லுங்கள்
ஏனென்றால்
அவைகள்தான் எனது இதயத்தை திருடின….
பிழை
ஏனென்றால்
அவைகள்தான் எனது இதயத்தை திருடின….
பிழை
ஏன் எனது காதலை மறுக்கிறாய்,
நான் எழுதிய காதல் கடிதத்தில் பிழையா? என்றேன்
இல்லை
உனது காதலே பிழை
-என்றாள் அவள்
Subscribe to:
Posts (Atom)