tag:blogger.com,1999:blog-41290340462729016602024-02-07T11:10:30.920+05:30குமாரின் கிறுக்கல்கள்...Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-9525103441742601842013-11-08T06:07:00.000+05:302013-11-08T06:07:12.907+05:30வெங்காயக் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இக்ரான் தற்பொழுது அவனுக்கு நன்றாகவே பழகியிருந்தது. பறக்க எத்தனிக்கையில் உள்ளூரக் கிளம்பும் பயமோ, அதன் அதிர்வினால் இக்ரானின் கொம்புகளை இறுகப் பற்றும் பதட்டமோ இல்லை. பண்டோராவின் மேகங்களில் விளையாடிக் கொண்டிருந்தான். தனது மூளையின் சிந்தனையே, இக்ரானையும் இயக்குவதால் அவனது ஆனந்தமும், தைரியமும் இக்ரானின் பறக்கும் வேகத்திலும், வான் சாகசங்களிலும் தெளிவாய்த் தெரிந்தது. ஒரு மேகக் கூட்டம் நுழைந்த போது ஒரு நுண்ணதிர்வுடன் இக்ரான் பதற, மின்னலென குறுக்கே நுழைந்த டோரக் அவர்களை இடித்துத் தள்ளியது. இக்ரானும், அவனும் தனித்தனியே சுழன்றபடி வீழ்ந்து கொண்டிருந்தபோது, திரை முழுக்க இருள் பரவியிருந்தது. மடிக்கணினியில், ப்ளேயரின் சீக் பாரினை அடுத்த 2-3 நிமிடங்களுக்கு கடத்தியபடி<br />
<br />
"<em>இந்த மாதிரி கீழ விழுந்தா நமக்கு முழிப்பு வந்திரும்லடா, அதான் கட் ஆகிடுச்சு</em>" எனக் கூறி முடித்தான் சிஜூ.<br />
<br />
அவர்களது கல்லூரி காபிடீரியா- அவனுடன் அமர்ந்திருப்பது அவனது உறவினர்கள். சிரித்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள், அடுத்த காட்சி அவனது சொந்த ஊரில் அவன் வீட்டின் அருகிலுள்ள ஒரு மைதானத்தில் நிகழ்கிறது-ஆனால் அங்கு விளையாடிக் கொண்டிருப்பது அவனது விடுதித் தோழர்கள். அவனுக்குத் தெரிந்த மனிதர்களே, சம்மந்தமில்லாத சூழ்நிலைகளில் பயணப்படுவதான காட்சிகள் - பின் மீண்டும் திரையில் இருள்.<br />
<br />
"<em>இந்த ரெண்டாவது கனவு அவ்ளோ தெளிவா இல்லடா. எங்கெங்கயோ போச்சு, அப்புறம் முழிச்சிட்டேன், 3 மணிக்கே. அதுக்கு அப்புறம் தூக்கமே வரல</em>" - சிஜூ.<br />
<br />
"<em>நேத்து லேப்ல ரொம்ப வேலையா? நைட் வீட்டுக்கு போன் பேசிட்டு தூங்குறதுக்கு முன்ன அவதார் படம் பார்த்தியா? உன்னோட கனவுகள் அததான் சொல்லுதுடா. கனவுகள பதிவு பண்ற கருவி பத்தின உன்னோட ஆராய்ச்சி எனக்கு பிரமிப்பா இருக்கு. ஆனா போன தடவ உன்னோட தியரி பிரசண்டேசன்க்கு கிடைச்ச ரெஸ்பான்ஸ் நியாபகம் இருக்கில்ல? இந்த புராஜெக்ட்தான் உன்னோட லைப். மத்தவங்க இந்த வீடியோவெல்லாம் பார்த்து சிரிச்சா கூட பரவாயில்ல, உன்னோட எதிர்காலமே சிரிச்சிடாம பார்த்துக்கோ. இந்த கார்ட்டூன் அவுட்புட் பதிலா, ரியல் டைம் அனிமேசன் மாதிரியாவது டிரை பண்ணிப் பாரு. உனக்கு முழு நம்பிக்கை வந்ததுக்கு அப்புறம் இன்னொருத்தர் யாரையாவது வெச்சு, அவங்களோட கனவுகள படம் பிடிச்சு காட்டு. கண்டிப்பா என்னோடத முதல்ல. ஆனா மூணாவது மனுஷன் ஒருத்தன் பரிபூரணமா இத ஒத்துக்கணும். அவனோட கனவுதான் திரையில வந்திச்சுன்னு 100% ஒத்துக்கணும். அங்கதான் இருக்கு உன்னோட வெற்றியே. இன்னும் உனக்கு நிறைய டைம் இருக்குதானே?</em>"<br />
<br />
தனது முயற்சிகளின் முதல் கட்ட முடிவுகள் குறித்த ஆரோக்கியாவின் கருத்துகளை கேட்டுக் கொண்டிருந்தான் சிஜூ.<br />
<br />
அடுத்... என எழுதிக் கொண்டிருக்கும் போதே, பூபதியின் எழுதுகோல் முள் உடைந்து போனது. எப்பொழுதும் தனது கதைகளை கரி எழுதுகோலில் எழுதுவதே அவனுக்கு வழக்கம். மையினால் எழுதினால் ஆங்காங்கே பிழைத் திருத்தங்கள், தெள்ளத் தெளிவாய்த் தெரிந்து விடும். அழிப்பான் இருக்க பயமேன்? வார நாவல் ஒன்றில் எழுத்தாளராகப் பணியாற்றும் இவனுக்கு அறிவியல் புதினங்கள் கை வந்த கலை. தற்போது பிரசுரமாகிக் கொண்டிருக்கும் தொடர்கதை ஒன்று, இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவாகிவிடும் என்பதால் அடுத்த படைப்புக்கான கதைக்களத்தில் இறங்கியிருக்கிறான். எழுதுகோலினை மீண்டும் கூர் செய்து முடித்த போது, கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வாசல் அணுகினான்.<br />
<br />
கதவு திறந்ததும், சைலன்சர் பொருத்தப்பட்ட பிஸ்டல் காரி உமிழ்ந்த தோட்டா ஒன்று அவனது சட்டைப் பைக்கு அருகாமையில் உள் நுழைந்து இதயம் தொட்டதின் அடையாளமாக, குருதி வழிய பூபா தரையில் சாய்கிறான்.<br />
<br />
அச்சு அசலாக தன்னைப் போலவே ஒருவன், குளிர் கண்ணாடியினைக் கழற்றியபடி, பிஸ்டலை பின் இடுப்பில் செருகிக் கொண்டு, உள்ளே நுழைவதை வெறித்தபடியிருக்க, வழிந்த குருதி தரையில் '<em>இடைவேளை</em>' என வரைவது திரையில் மிளிர்கிறது. திரையரங்கினுள் வெளிச்சமும் சலசலப்பும் பரவ, குமார் - உமாவிடம் "பாப்கார்ன் வாங்கிட்டு வர்றேன்மு" எனக் கூறிவிட்டு இருக்கைகள் கடந்து வெளியேறுகிறான்.</div>
Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-69564083572522190552013-04-16T08:28:00.000+05:302013-04-16T08:28:12.428+05:30[சிறுகதை] ஐஸ் வண்டி…<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
“நாலு தடவ சொல்லியும் போகாத கழுத இருபது பைசா தாரேன், முட்டாயி வாங்கிக்கோனு சொல்லி முடிக்கங் காட்டியும் ஓடுது பாரு” </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
பாபுவின் சாமர்த்தியத்தினை அவனது அம்மா விமர்சித்துக் கொண்டிருந்தாள். கடையிலிருந்து திரும்பியவன் கையில் அம்மா சொல்லி அனுப்பிய கோதுமை ரவை பாக்கெட் மட்டும்தான் இருந்தது, </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
“முட்டாயி எங்கீடா? வாங்குனதுமே தின்னுபோட்டியா?” </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
அம்மாவின் கேள்விக்கு “இல்லிங்க்மா, ஜோப்பில இருக்குதுங். நாளைக்கு ஸ்கோலுக்கு போறப்ப எதுனா வாங்கிக்றேனுங்” பாபு பதில். </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
‘எதுனா’ என்பது என்னவென பாபு அந்த இருபது பைசா வாங்கும் முன்னரே முடிவெடுத்து விட்டான். இதுவரை இப்படி சேர்த்த பைசா இதனோடு சேர்த்து ஒரு முழு ரூபாய். நாளை ஐஸ் மாமாவிடம் சேமியா ஐஸ் வாங்குவதுதான் திட்டம். அம்மாவிடம் ரவை பாக்கெட் கொடுத்துவிட்டு, பைசாவினை பென்சில் பெட்டியின் அடியில் உள்ள மயிலிறகுக்கு அருகில் சேர்த்தான்.</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
“ம்மா விளையாடப் போயிட்டு வரேனுங்” </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
அனுமதி எனும் பெயரில் தகவலைச் சொல்லிவிட்டு</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
“சக்கிலி வளவு பக்கமா உன்னைய பார்த்தேன்னா, உங்கப்பாருகிட்ட சொல்லி டின்னு கட்டிபோடுவேன்” </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
அம்மாவின் உத்திரவு/எச்சரிக்கை காற்றில் கரைவதற்குள் பாபு தெருவிலிருந்து மறைந்திருந்தான். விளையாடி வீடு திரும்பியதும் ஒருமுறை, இரவு உணவுக்குப் பின் ஒருமுறை, உறங்கும் முன் ஒருமுறை என மூன்று ரூபாய் அளவிற்கு எண்ணி முடித்தான். கனவினில் நாளைய சேமியா ஐஸ் வந்திருக்குமா தெரியாது, ஆனாலும் நன்றாகவே உறங்கிப் போனான்.</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
காலையில் பள்ளியில் எல்லோரும் நீராருங் கடலுடத்த வென தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடிக் கொண்டிருக்க, பாபு மட்டும் மதிய உணவு இடைவேளை எப்பொழுது வருமென சுவர்க் கடிகாரத்தினை விரட்டியபடி அவன் வயதுக்குரிய தேசத் துரோகமொன்று செய்து கொண்டிருந்தான். 12 .30 மதிய உணவு இடைவேளை – பத்து நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸ் காலி செய்து விட்டு, ஐஸ் மாமா வரும் வழி நோக்கி விரைகிறான். மாமா வரும் வரை அவனுக்கு விளையாட்டில் கவனமே இல்லை, ‘பாம் பாம்’ என எங்கோ ஹாரன் பிளாடர் அழுத்தும் சத்தம் பாபுவிற்கு நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஆதாரமாய்க் கிடைத்த கயிறென ஒலிக்கிறது. ‘ஏனுங் மாமா இன்னைக்கு இவ்ளோ லேட்டு?’ </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
என தேனடையைச் சுற்றிய தேனீக்களாய் ஐஸ் வண்டியைச் சுற்றியது கூட்டம்.</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
“நானு என்னுமோ எங்க்கூட்லேர்ந்து ஐஸ் பண்ணி விக்கிரவனாட்ட கேக்குதுங்க பாரு. ஐஸ் கம்பேனிக்கு போயி பாக்ஸ் பேக் பண்ணி கொண்டார வேணாமாடா கண்ணுகளா? எப்பியும் சீக்கிரமா போற 12 மணி ரெயிலு இன்னைக்கு லேட்டு ஆயிப்போச்சாட்ட இருக்குது. நா வர்றப்பதேன் ரயிலு கேட் போட்ருந்தான். நானு என்ன புட்டுர் பைக்கா வெச்சிருக்கேன்? 2 மைலு போயி சுத்திட்டு வர்றதுக்கு? அதாண்டா லேட்டு. மாமாக்கு ஆராய்ச்சு தண்ணி தாங்கடா, வெயில்ல பெடலு முதிச்சு தொண்ட தண்ணி வத்தீருச்சு” </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
ஐஸ் மாமாவின் தாகம் தீர்க்க வாட்டர் பாட்டிலுடன் தண்ணீர் டாங்க் நோக்கி ஓடிய நான்கு வாண்டுகளில் முதல் வாண்டு யாராக இருக்குமென உங்களுக்கு சொல்லித்தான் தெரியுமா? “அடிச்சுக்கிடாம ஒவ்வொருத்தரா கேளுங்க கண்ணுகளா. எல்லாருக்கும் மாமா, ஐஸ் வெச்சிருக்கேன்டா. பாலைஸ், கப்பைஸ், கோனைஸ்” –</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
-ப்ப்பாம், ப்ப்பாம்-</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
– “மாமா ஒரு சேமியா ஐசுங்” </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
பாபு குரலுக்கு தலை நிமிர்ந்த ஐஸ் வண்டி “என்னடா கண்ணு நல்லாருக்கியா? இன்னைக்கு காசு சாஸ்தி சேத்துப் போட்டியாட்ட இருக்குது. அம்பது பைசா மேங்கோ ஐஸ் வாங்காம, ஒர்ரூபா சேமியா ஐஸ் கேக்குற?” –</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
ஐஸ் வண்டிக்கு பாபு மேல் மட்டும் தனிப் பிரியம். சேமியா ஐசினை காதலிக்கும் வயது பாபுவுக்கு. மழை நாளொன்றில் தலை நனைவதைக் காக்க பாலித்தீன் பையினை தலையில் சுற்றி இறுக்கம் தளர்த்த முடியாமல் போட்டோவாகிப் போன ஐஸ் வண்டி மாமாவின் மகனின் பெயர் பாபுவாக இருந்திருக்கலாம் என்பதான சென்டிமென்ட் புரிய வாய்ப்பில்லை..</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
இன்று பாபுவின் நண்பர்களுக்கு வழக்கமாய்க் கிடைக்கும் அந்த காக்கா கடி ஐஸ் துண்டு கிடைக்காது எனத் தெரியும். இது அவன் எப்பொழுதும் வாங்கும் மேங்கோ ஐஸ் இல்லையே, அவனுக்கு மிகப் பிடித்த சேமியா ஐஸ் ஆயிற்றே. காதலர்களை தொந்திரவு செய்வதில் நண்பர்களுக்கு என்றுமே விருப்பம் இருந்ததில்லை. பாபுவும் அவனது ‘ஐஸ்’-ம் தனிமையின் சுகத்தில் உருகிக் கொண்டிருந்தனர். ஐஸ் வண்டி – இப்படித்தான் அந்த ஊரில் அவரை எல்லோருக்கும் தெரியும்.</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
‘இந்தாப்பா ஐஸ்’ ‘ஏய் ஐஸ்’ ‘ஐஸ் வண்டிக்காரரே’ ‘ஐஸ் ஐஸ்’ என்றுதான் அவர் கேட்டு பழக்கப் பட்டிருக்கிறார். சென்ற வருட மாரியம்மன் கோவில் திருவிழா நன்கொடை வரவு நோட்டில் ‘ஐஸ் வண்டிக்காரர் - ரூ 5 .25 ‘ என்ற பத்திரப் பதியமும் இவரை விட்டு வைக்கவில்லை. கோடை விடுமுறை நாளொன்றில் வீட்டருகே ஐஸ் மாமாவிடம் மேங்கோ ஐஸ் வாங்கிய போது அம்மா வந்து கேட்டது </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
“அடதேனப்பா ஐஸ் வண்டி, நீங்க என்ன சனம்?”</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
சட்டென மாமாவின் முகம் மாறியதின் காரணம் பாபுவுக்கு விளங்கவேயில்லை. இதே போலத்தான் பல சமயங்களில் மாகாளி புறக்கடை பக்கமாக மட்டுமே வருவதும், அவருக்கென புறக்கடை கூரையில் சொருகியிருக்கும் ஈயத் தட்டு, குவளை பற்றியும், அவர் தன்னை தேவுரே(கடவுளே) என அழைப்பதற்கும் பாபுவிற்கு என்றுமே விளங்கியதேயில்லை சில பருவம் கடக்கும் வரையில்.</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
மொத்தப் பள்ளிக்கே அரை சதத்திற்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட மாணாக்கர்களுக்கு துவக்கப் பள்ளி வரை மட்டுமே வாய்க்கப்படிருந்தது அந்த அழகிய கிராமத்திற்கு. அதிகம் படிக்க வைப்பதற்கோ, சத்துணவு இல்லா விட்டால், வீட்டினில் உணவு அளிக்கும் அளவிற்கோ வசதி வாய்ப்பில்லாத ஏனைய குடியானவர்களுக்கு தங்களது பிள்ளைகளை கட்டிட வேலைக்கோ, தறிப் பட்டறைக்கோ, பனியன் கம்பெனிக்கோ அனுப்புவது மட்டுமே விதிக்கப் பட்டிருந்தது. மச்சு வீட்டுப் பிள்ளைகளுக்கு அது திருத்தி எழுதப் பட்ட விதி. பாபுவைப் போல, சீரான சட்டங்களின் மேல் அடுக்கிய ஓடுகள்/சிமெண்ட் கூரைகளில் தினமும் கண் விழிக்கும் தவப் புதல்வர்கள் மட்டும் துவக்கப் பள்ளி கடந்து கல்வி தொடரலாம். இப்பொழுது பாபுவின் பள்ளிக்கு எதிரேதான் ஐஸ் கம்பெனி என்பதால், அவ்வப்போது மட்டும் பாபு ஐஸ் மாமாவினை சந்திக்க முடிந்தது. அதுவும் அந்த இடத்தில் பேக்கரி வரும் வரையில் தான். அதன் பிறகு ஐஸ் மாமாவினை பாபு சந்திக்கவேயில்லை.</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
அரைக்கால் சட்டையிலிருந்து – முழுக்கால் சட்டை, பிளாஸ்டிக் பாக்சிலிருந்து – நடராஜ் ஜியாமட்ரி பாக்ஸ், வால் சொடுக்கினால் தலையை நீட்டும் பால் பாய்ன்ட் பேனாவிலிருந்து – ஹீரோ பேனா என பாபுவின் மாற்றங்களுக்கான பட்டியல் நீண்டது. பள்ளிச் சீருடையிலிருந்து சாதாரண உடை, வியாழக் கிழமை சந்தையில் வாங்கிய செருப்பிலிருந்து பெல்ட் செப்பல், ஒட்ட வெட்டிய கேசத்திலிருந்து ஹீட்டர் வைத்து படிய வாரிய தலை, ஜீன்ஸ், ஒன்-சைடு காலேஜ் பேக், கையில் காப்பு என பாபு வளர்ந்து மாற்றம் பெற்றதுடன், அவன் பார்த்து வளர்ந்த கிராமமும் – வாழைத் தோப்புகளில் வரிசையாக கல் முளைத்து அவென்யூக்களும், மிதிவண்டி/மாட்டு வண்டித் தடங்களில் டி.வி.எஸ் மொபட்டுகளும், பரம்பரைத் தொழில் கொண்டே பெயர் சூட்டப் படும் பலரும் இன்று சாரை சாரையாய் பனியன் மில் ஊழியர்களாயும் மாற்றங் கண்டு விட்டனர்.</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
கல்லூரி விழா சம்மந்தமாக ஒரு நாள் பாபு டவுன் வந்த போது, எதேச்சையாக ஐஸ் மாமாவினைச் சந்தித்தான்.</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
“மாமா எப்படி இருக்கீங்? அடையாளம் தெரியுதுங்களா? நாந்தானுங் மாமா பாபு” </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
குரலோ, உருவமோ அவருக்கு பிடிபடாவிடினும், பெயர் மட்டும் அவனை நன்றாக நிலைக்காட்டியது.</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
“நல்லா இருக்கியா கண்ணு? எத்தசோடு வளந்துட்டடா? அடையாளமே தெரீலப்பா. நீயாவது அடையாளங்கண்டியே ”</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
மாமாவின் நரையினையும், தடித்த மூக்குக் கண்ணாடியும் ஆச்சரியமாய்ப் பார்த்த படி “இப்போ என்ன பண்றீங் மாமா. ஐஸ் இன்னும் இருக்குதுங்களா?”</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
வெறுமையான சிரிப்பொன்றினை உதிர்த்து விட்டு</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
“இல்லீடா கண்ணு. சைக்கிள் முதிக்க முடியலன்னு மொபட்டு வாங்கி, அதுக்கு எண்ணெய் ஊத்த முடியாம, கம்பெனி ஓனரும் நட்டத்துல எத்தன நாள் நடத்துறதுன்னு கடைய வித்துப் போட்டாரு. நானும் அங்க இங்க சுத்திப்போட்டு கடைசியா பனியன் மில்லே கதின்னு வந்திட்டேன்” </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
அதன் பிறகு இருவருமே என்ன பேசலாமென மௌனமாய் விவாதித்துக் கொண்டிருந்தனர். தன் நிறுத்தத்திற்கு முன்னதாக இருக்கையிலிருந்து எழுந்த மாமாவிடம் பாபு </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
“மாமா உங்க பேரு என்னங் மாமா?”</div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
பாபுவின் தோளில் கை பதித்து சொன்னார் </div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: #e5e5e5; color: #656565; font-family: 'Trebuchet MS', 'Lucida Grande', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20.796875px; margin: 0px; padding: 0px;">
“முருகேசன்-டா கண்ணு, ஐஸ் வண்டி முருகேசன்”</div>
</div>
Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-71197297398514599392012-11-14T12:15:00.000+05:302012-11-14T12:15:20.762+05:30துப்பாக்கி...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibZyONLZQVERLuOYDxaeQRkCe4WmN6NtINqLAXAr6m96VHq8WLW75aJLnlDOI3vX1nNB6aUqrLPPF9Sjxz1an8uwA04n8jnbloxFrFNwWTaI9YMxiZUhezpsEiVwJn6WRibtQh-FmzWSI/s1600/First_look_Thuppakki.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibZyONLZQVERLuOYDxaeQRkCe4WmN6NtINqLAXAr6m96VHq8WLW75aJLnlDOI3vX1nNB6aUqrLPPF9Sjxz1an8uwA04n8jnbloxFrFNwWTaI9YMxiZUhezpsEiVwJn6WRibtQh-FmzWSI/s320/First_look_Thuppakki.jpg" width="204" /></a></div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
<br /></div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
போன தீபாவளியில் முதல் நாள் மாலையே வேலாயுதம் எனும் வெற்றிக் காவியம் கண்ட நமது குமார், இந்த முறையும் சற்றும் மனம் தளராமல் இந்த தீபாவளிக்கும் முதல் நாள் இரண்டாம் காட்சிக்கே துப்பாக்கியினை எதிர் கொள்ளத் துணிந்து விட்டார். வர மாட்டேன்னு அடம் புடிச்ச 10 பேருக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணி மொத்தமா கிளம்பிட்டோம். 'ஒவ்வொரு தமிழனும் பெருமைப் படணும், கர்வப் படணும்' எங்கேயோ இருந்து ஒரு எச்சரிக்கை, கூடவே 'சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவான், நீ வேற காட்டு காட்டுன்னு சொல்ற. இனி அவ்ளோதான்' சேர்ந்து ஒலிக்குது. சீட் பெல்ட்லாம் போட்டுக்கிட்டு ரெடியாகியாச்சு, படமும் போட்டாச்சு. அண்ணன் வர்ற ட்ரெயினுக்காக காத்திருக்கிற தங்கைகள், அப்பா அம்மாவோட முகமே இவங்கதான் ஹீரோ பேமிலினு காட்டிட்டுது. எங்கேயோ நடுக்காட்டுல ட்ரெயின் ரிப்பேர்னு நிக்குது. தியேட்டருக்கே தெரியும் இப்போ ஹீரோ இன்ட்ரோ. எஞ்சினே ஸ்டார்ட் ஆகல ஆனா ட்ரெயின் மூவ் ஆகுது, எல்லாரும் ஆச்சரியமா பாக்கும் போது ஹெலிகாப்டர்ல கேமராவ கடைசி போட்டிலேர்ந்து எஞ்சின் வரைக்கும் போகஸ் பண்ணி எடுத்திட்டு போறோம். ட்ரெயின் முன்னாடி யாரோ ஒருத்தன் சட்டை போடாம பனியனோட, ஆர்ம்ஸ்லாம் தெரியுற மாதிரி ஓடுறான். கயிரோட ஒரு முனைய ட்ரெயின்ல கட்டிட்டு, இன்னொரு முனைய தன்னோட இடுப்புல கட்டி இழுக்கிறாரு தளபதி. இப்டிலாம் இமேஜின் பண்ணிதான் படம் பார்த்தேன், ஆனா இது எஸ்.ஏ.எஸ் படம் இல்லையே ஏ.ஆர்.எம் படமாச்சே!!!! ஆர்ப்பாட்டமே இல்லாம தளபதிக்கு இன்ட்ரோவா? 'அட' அப்படின்னு நம்ம எப்.எம் பாலாஜி ரிவியு சொல்லும்போது ஒரு பொண்ணு சொல்லுமே அப்படி சொல்லிகிட்டு கொஞ்சம் இன்ட்ரஸ்ட் ஆகுறோம்.</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
*</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
40 நாள் வேகேசனுக்காக ராணுவத்திலிருந்து வீட்டுக்கு மும்பை வர்றாரு ஜெகதிஸ். வந்த இடத்துல ஸ்டேசன்லேர்ந்தே பொண்ணு பார்க்க கூட்டிட்டு போயிடறாங்க. வேற யாரு (காஜல்) நிஷா எண்ட்ரிதான். ஆனா கான்செப்ட்டே இல்லாம ஜெகதிஸ் வேணாம்னு சொல்ல, அப்புறமா புடிச்சிருக்குன்னு சொல்ல - அட படத்துல 5 பாட்டு வேற எப்படிதான் கொண்டு வர்றதாம்? அத விடுங்க. பாட்டுனா பாட்டேவா? பைட்டு பைட்டு, பைட்டுனா பைட்டேவா? ரொமான்ஸ் ரொமான்ஸ், பாட்டு பாட்டு, பைட்டு பைட்டுனு முதல் 40 நிமிசம் என் கூட வந்த எல்லாரும் என்னைய தூக்கி போட்டு மிதிக்கலாமா இல்ல அடுத்த ஷோவுக்கும் டிக்கெட் எடுத்து இவன மறுபடி பாக்க வேக்கலாமானு யோசிக்கும் போது ஸ்க்ரீன்ல தளபதி டயலாக் சொல்றாரு "இப்போ என் வீட்லேர்ந்து ஒருத்தன் பின்வாசல் வழியா வெளிய வருவான், அவன நாம பாலோ பண்ணனும்" என்னோட மைன்ட் வாய்ஸ் 'இப்போ குமார்னு ஒருத்தன் தியேட்டரோட பின் வாசல் வழியா எஸ்கேப் ஆக பார்ப்பான். அவன விடாம நாம புடிச்சு உள்ள உக்கார வெக்கணும்' அடுத்த காட்சில தளபதி ஒரு அசைன்மென்ட் முடிக்கிறாரு. அந்த அசைன்மென்ட் ஆரம்பிக்கும் போது ஒரே சிப்பு சிப்பா இருந்துச்சு, முடிக்கும் போது, முன்ன சொன்ன மாதிரி இந்த இடத்துல இன்னொரு 'அட' போட வெச்சிட்டாங்க.</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
*</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
வழக்கமான பச்சை கார்கோ போட்ட பாகிஸ்தான் தீவிரவாதி இல்லாம, ஸ்லீப்பர் செல்ஸ்னு ஆரம்பிக்கும் போது, வில்லன் - ஹீரோகிட்ட போன்ல சவால் விடுறான் 'தக்காளி உன்ன கொன்னே போடுவேன்' தளபதி ரிப்ளை 'Am waiting'. <span class="Apple-style-span" mce_name="strong" mce_style="font-weight: bold;" style="font-weight: bold;">இன்டர்வெல்</span>. இப்பயே ஓடிப் போயிரலாம்னா கதவ வேற மூடிட்டான். படம் நல்லா இருக்குமோனு தோணுது, ஆனா இல்லாம போச்சுனா உசுருக்கு உத்திரவாதம் இல்ல. அப்போதான் இன்னொரு விஷயம் பொறி தட்டிச்சு. தளபதி இப்போ வரைக்கும் பஞ்ச் டயலாக்கே பேசலையே? செகன்ட் ஹால்ப் நல்லாத்தான் இருக்குமோ? சரி போய்தான் பார்ப்போமேன்னு உள்ள போனேன். பரவாயில்ல மக்களே சங்கர் சார் படத்துல நடிச்சு தளபதி தெளிவாயிட்டர்னு நினைக்கிறேன். துப்பாக்கிய நல்லாவே சுட்டிருக்காரு. ஸ்லீப்பர் செல்ஸ் கெட்டவனுங்க, ஹீரோ நல்லவன், படத்தோட முடிவு என்னனு தெரியாதா என்ன? இருந்தாலும் தளபதி+முருகதாஸ்+சந்தோஷ் சிவன் காம்பினேசன்ல துப்பாக்கி உங்கள நிச்சயம் திருப்தி படுத்தும்.</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
*</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
தளபதி - இப்போதான் ட்ராக் பிடிச்சிருக்கீங்கனு நினைக்கிறேன். இப்படியே கண்டினியூ பண்ணினா, அதாவது இதே மாதிரி படங்களா இல்லாம அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தா நல்லா இருக்கும். சங்கர், முருகதாஸ்னு ஒழுங்கா டைரக்டர் செலக்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கீங்க. நடிப்பு, டான்ஸ், ஆக்சன்லாம் எப்போமே ஒழுங்காதான் பண்றீங்க. கதை, டைரக்டர்லதான் எப்பவும் சொதப்பல்ஸ் இருக்கும். இனிமே என்ன பண்றீங்கன்னு பாக்கலாம். படத்துல அங்கங்க ஒரு சில காட்சிகள் உங்க இந்த படத்து ஹேர் ஸ்டைல் மாதிரி இருந்தாலும், ஓவரால் பெர்மாபென்ஸ் - ஐ லைக். பஞ்ச் டயலாக் இல்லாம ஆக்சன் படம் ஒத்துகிட்டதுக்காகவே இன்னொரு 'அட'. தங்கச்சி, அம்மா கேரக்டர்கள் படத்துல இருந்தாலும் செண்டிமெண்டல்ஸ் இல்லாதது - குட் குட். ஆமா பர்ஸ்ட் சீன்ல சட்டை போடாம பனியனோட ஆடினீங்களே, க்ளைமாக்ஸ் பைட்டுல ஏன் சட்டை கிழியக் கூட இல்ல? அப்புறம் வில்லனுக்கும் சட்டை கிழிக்கணும், அவன் ஆர்ம்ஸ் நம்ம லேக் பீஸ் சைஸ்ல இருக்குனு பயமா? இல்ல குருவில அப்படி டிரை பண்ணது சிரிப்பொலி சானல்ல போடுறாங்களேனு தெரிஞ்சு போச்சா? நண்பனை தொடர்ந்து இன்னொரு விருந்து கொடுத்திருக்கீங்க உங்க ரசிகர்களுக்கு. என்ஜாய் பண்ணட்டும் பசங்க.</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
*</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
நிஷா @ காஜல் - "டைரக்டர் சார் படத்துல என்ன கேரக்டர்? எனக்கு எந்த அளவுக்கு வெயிட்டேஜ்?" டைரக்டர் - "நீங்க வந்தா மட்டும் போதும். உங்களுக்கு 5 பாட்டு இருக்கு" அவ்ளோதான்.</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
*</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
இ(ம்)சை - ஹாரிஸ் கிட்ட சரக்கு தீர்ந்திடுச்சுனு நினைக்கிறேன். எல்லாம் முன்னாடி கேட்ட டியூனாவே இருக்கு. 'ஏய் ஹாரிஸ்க்கு இதே கமென்ட் நீ முதல்லயே சொல்லிருக்க குமாரு' ஆமா அவரு மட்டும் போட்ட டியுனே மறுபடியும் போடுவாராம், நாங்க மட்டும் புதுசா யோசிச்சு கமென்ட் சொல்லனுமா? மொதல்ல உன்ன நாடு கடத்தணும் ஹாரிஸ். உன் ரேஞ்சுக்கு ஏ.ஆர்.ஆர், யுவன் லாம் சொல்ல முடியாது. அனிருத், ஜி.வி.பி கிட்ட டியூசன் கிளாஸ் ஜாயின் பண்ண டிரை பண்ணலாமே?</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
*</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
ஒளிப்பதிவு - தலைவாஆஆஆஆஆஆஆஆ. உங்களுக்கு ஆஸ்கார் கெடச்சதுல தப்பே இல்ல. படத்துக்கு உங்களோட காமிராதான் செகன்ட் ஹீரோ. I'm impressed. தங்கச்சிய காப்பத்துற சீன்ல புகைக்கு பின்னாடி இருந்து என்ட்ரி ஆகுற தளபதி, சாங்க்ஸ் பாக்குறதுக்கு எல்லாமே அருமை. - ‘அட’</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
*</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
<div>
பத்மஸ்ரீ ஜெயராம் கலக்கிருக்காரு. கொஞ்சம் காட்சிகளே வந்து போனாலும் அவர் வர்ற எல்லா காட்சிளையும் சிரிப்பு கியாரண்டி. சத்யன் - உங்களுக்குள்ள ஒரு நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஒளிஞ்சிருக்காரு. நல்லா வருவீங்க தம்பி, ட்ரஸ்-செல்ப் ல தீவிரவாதியா பார்க்கும் போது கண்ல ரியாக்சன் காட்டுறதும், 'பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா' டயலாக்குக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் போதும் அசத்தல். இந்த இடத்துல கூட நாம ஒரு 'அட' சேர்த்துக்கலாம்.</div>
<div>
*</div>
<div>
ஏ.ஆர்.முருகதாஸ் - உங்க சரக்கு காலி ஆகிட்டே வருதுன்னு நினைக்கிறேன். வழக்கமா உங்க படங்கள் ஆரம்பத்திலேயே சூடு பிடிச்சு கடைசில ஜவ்வு போடும். இந்த படம் மெதுவா ஏறி அப்புறம் இறங்கி இருக்கு. இந்த படத்துக்கு நீங்க விஜய் டிவில கொடுத்த பெட்டியெல்லாம் நான் பாக்கல, அனேகமா போதி தர்மருக்காக வாய விட்டு வாங்கி கட்டுனதுலயே திருந்திருப்பீங்கனு நினைக்கிறேன். அடுத்த படம் என்ன பண்ண போறீங்கனு காத்திருந்து பார்ப்போம். எது எப்படியோ, துப்பாக்கிய வழக்கமான விஜய் படமா இல்லாம முருகதாஸ் ஸ்டைல்ல கொடுத்ததுக்கு தாங்க்ஸ்.</div>
<div>
*</div>
<div>
படத்துல ஹீரோவுக்கு மாஸ் இன்ட்ரோ இல்ல, பஞ்ச் டயலாக் இல்ல, அம்மா, தங்கச்சி சென்டிமென்ட் இல்ல, அந்த அசைன்மென்ட் பண்ற இடத்துல 12 இடங்கள்லயும் ஹீரோவே போய் எல்லாரையும் சுட்டு 12 பேரும் ஒரே நேரத்துல விழற மாதிரி காட்டாதது இது மாதிரி பல விஷயங்கள் வழக்கமான விஜய் படங்கலேர்ந்து இத தனிமைப் படுத்தி ஜெயிக்க வெச்சிருக்கு.</div>
<div>
*</div>
<div>
சந்தோஸ் சிவனின் மூன்றாவது கண் வழியா காஜல் அகர்வால் படத்துக்கு ப்ளஸ்தான், ஆனா அந்த கேரக்டர் மைனஸ். காஜல் ஸ்க்ரீன்ல வந்தாலே தியேட்டரே அலறும் 'அய்யய்யோ பாட்டு போட்டிருவானே' - Haris rocks. முதல் பாதில ஸ்லீப்பர் செல்ஸ் அசைன்மென்ட்னு சீரியஸா போகுற டிராக்குக்கு பேரலல்லா காமெடி & கில்பான்ஸ் டிரை பண்ணது சரியா வரல. சின்ன சொதப்பல். க்ளைமேக்ஸ் காட்சி கில்லியோட க்ளைமேக்ஸ் ஜெராக்ஸ். நிறைய இடங்கள்ல ஹிந்தி டயலாக்குக்கு சப் டைட்டில் இல்ல. வில்லன் இங்க்லீஸ்லதான் பேசுறான், அதையே ஆடியோ போட்டு தமிழ் சப்டைட்டில் போட்டிருக்கணும். இல்லனா அவனுக்கும் தமிழ் டப்பிங் பேச வெச்சிருக்கணும். அவன் வேற லாங்க்வேஜ் பேசுறதும் கேக்குது, 2 செகன்ட் டிலேல தமிழ் டயலாக்கும் வர்றது டாகுமென்ட்ரி படம் எபெக்ட் கொடுக்குது. இது மாதிரி சின்ன சின்ன ஜெர்க்கு.</div>
<div>
*</div>
</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
இந்த தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு தல தீபாவளி, சாரி சாரி தளபதி தீபாவளி</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
*</div>
<div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px;">
துப்பாக்கி - டமால் டுமீல்...</div>
</div>
Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-40295993745258961462012-10-03T07:09:00.001+05:302012-10-03T07:09:14.888+05:30பிறழ்வு - ஒரு டிரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: white; color: #6b6b6b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 2; list-style: none; margin-bottom: 10px; margin-top: 10px; padding: 0px;">
நதியெனப் பரந்து, அருவியென வீழ்ந்து<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />பாறைச் சிதறல்களில் சிரம் வெடித்து வீழ்கிறேன்,<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />குருதிப் பள்ளங்களில்</div>
<div style="background-color: white; color: #6b6b6b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 2; list-style: none; margin-bottom: 10px; margin-top: 10px; padding: 0px;">
ஆறுதல் தேடிய மடித் தூக்கங்களில்<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />தலை வருடும் சர்ப்பமென<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />விஷப் பற்களின் கீறல்கள்</div>
<div style="background-color: white; color: #6b6b6b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 2; list-style: none; margin-bottom: 10px; margin-top: 10px; padding: 0px;">
ஆரத் தழுவும் நம்பிக்கைகளில்<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />கழுத்து நெரிக்கும் துரோகங்களென<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />பிணம் முளைக்கும் கரிசல் பூமி</div>
<div style="background-color: white; color: #6b6b6b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 2; list-style: none; margin-bottom: 10px; margin-top: 10px; padding: 0px;">
மழலைத் தொடுதலென கூடு துளைக்கும்<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />தோட்டாக்களில் சிகரெட் புகையெனப் பிரியும்<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />உயிர் நாளங்கள்</div>
<div style="background-color: white; color: #6b6b6b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 2; list-style: none; margin-bottom: 10px; margin-top: 10px; padding: 0px;">
உருக்கும் குளிர் போக்கிய போர்வைகளில்<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />சாம்பலாக்கும் கனலென மணக்கும்<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />நாளைய நினைவுகள்</div>
</div>
Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-45336205555238676812012-10-01T01:03:00.002+05:302012-10-01T01:03:32.398+05:30திருட்டுத் தாண்டவம்... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
எந்த விஷயம்னாலும் 15 நிமிசத்துல மறந்திடும் ஹீரோவுக்கு, நம்பர் 4 னு மார்க் பண்ணின வில்லனோட அடியாள் போட்டோவ வெச்சு அவனைத் தேடிப் போய் கொலை பண்றாரு சஞ்ஜய் - நம்பர் 5 எங்க இருக்கான்னு தகவல் சொன்னத வெச்சு ஹோட்டலுக்கு தேடிப் போய் கொலை பண்றாரு கண்ணு தெரியாத கென்னி. நம்பர் 5 , 4 னு கணக்கு வெச்சு ஹீரோயினிய கொலை பண்ணின வில்லன்கள தேடித் தேடி கொன்னுட்டு, நம்பர் 1 வரவுக்காக காத்திருக்காங்க சஞ்ஜயும், சிவா @ கென்னி @ இன்னும் ரெண்டு பேரு மறந்து போச்சு. memory lossக்கு சஞ்ஜய் போலராய்ட் கேமாரால போட்டோ எடுத்து பேரு எழுதி வெப்பாரு, உடம்புல பச்சை குத்துவாரு - கண்ணு தெரியாத கென்னி எக்கொலேஷன்.<br />
<br />
சஞ்ஜெய் ராமசாமிய பத்தி கிசு கிசு பரப்பின பொண்ண திட்டணும்னு அவரு போயிட்டிருக்கிற வழில, கால்வாரி கல்பனா - நடக்க முடியாத குழந்தைகளுக்கு உதவி பண்றத பார்த்ததும் லவ்வாகிப்போகுது. அடுத்து தமிழ்த் திரையுலக சம்பிரதாயம் 1 படி ஒரு பாட்டு வரணுமே, 'ஒரு மாலை இளவெயில் நேரம்' - கல்யாணமே வேணாம்னு சொல்ற இன்டர்போல் ஆபீசர்(எதோ RAW ஏஜன்ட்டாம்) சிவக்குமார் நேரடியா பொண்ணுகிட்டவே பேசிடலாம்னு போகும் போது நாய்க்குட்டிகளுக்கு குடை குடுத்திட்டு, மழைல நனையுற மீனாட்சி மேல லவ் வருது - சம்பிரதாயம் 1 - 'அனிச்சம் பூவழகி ஆடவைக்கும் பேரழகி'.<br />
<br />
ஏதோ கேக்கனும்னு வந்த மொபைல் கம்பெனி ஓனர் சஞ்ஜய், கல்பனாகிட்ட தன்னை நடிப்பு சான்ஸ் கேட்டு வந்த மனோகர்னு காட்டிக்கிறாரு - முதல் இரவுல பேசுறதே தப்பு, இதுல நீங்க சப்-இன்ஸ்பெக்டர்தானே னு கேக்குற மீனாட்சி கிட்ட ஆமா ஆமா னு மண்டைய ஆட்டி வெக்கிறாரு இன்டர்போல் ஆபீசர் சிவா. ஒரு வீடு வாங்கணும், அம்பாசிடர் கார் வாங்கணும்னு லட்சியமா இருக்குற கல்பனாவுக்கு ஹமாம்-ஸ்வீட் ஹோம்ல பரிசு விழுந்ததா ஒரு வீடு பரிசா கொடுக்கிறாரு சஞ்ஜய் - ஐ பவுண்டேசன் ஆரம்பிக்கிறதுதான் லட்சியம்னு இருக்கிற மீனாட்சியோட பெயிண்டிங்க்ஸ்லாம் ஏலத்துல விட்டு அவங்க ஐ பவுண்டேசனுக்காக டொனேசன் வாங்கித் தர்றாரு சிவா. 'நான் உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லணும்' சஞ்ஜய் லிப் மூவ்மென்ட்க்கு கல்பனா பேசுவா - 'உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்' சிவா லிப் மூவ்மென்ட்க்கு மீனாட்சி பேசுறா.<br />
<br />
செகன்ட் ஹீரோயின் இன்ட்ரோ - சித்ரா, தமிழ் சம்பிரதாயம் 2 - 'எக்ஸ் மச்சி, ஒய் மச்சி, எப் எம் மச்சி' - சாரா விநாயகம்- 'யாரடி மோகினி (டப்பிங் பாட்டு)'. ஆமா எதுக்காக இந்த ஹீரோயின்? ஹீரோவோட ப்ளாஷ்பேக்லாம் யாரு கிளறி எடுக்கிறதாம்? தமிழ் சம்பிரதாயம் 3 படி முதல் ஹீரோயினிக்கே 3 பாட்டு, 2 சென்டிமென்ட் சீன்தான் ஒத்துக்குவாங்க. ரெண்டாவது ஹீரோயினிக்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? சாரா விநாயகம் - நீங்க வந்தா மட்டும் போதும். கல்பனா முதுகுல கொஞ்சம் தக்காளி சட்னி ஊத்தின வில்லன், இப்போ ஹீரோ - ஹீரோயின் படுத்துகிட்டே கண்ணும் கண்ணும் நோக்கியான்னு சோகமான ரொமான்ஸ் பிழிஞ்சிட்டு இருக்கும் போது 'டங்'னு தலைல தக்காளி சட்னி போட்டுடறான் வில்லன் - பாதி பாம் வெடிச்சு ஹீரோ - ஹீரோயின் படுத்துகிட்டே நோக்கியா பாட்டு பாடும் போது 'டமால்'னு மீதி பாம் வெடிச்சு ஹீரோயின் சிதறிப் போயிடறாங்க. (நமத்துப் போன வெடிகுண்டோ? இன்ஷ்டால்மென்ட்ல வெடிக்குதே?)<br />
<br />
யார ஏமாத்தப் பாக்குற அங்க வில்லன் டபுள் ஆக்ட், அவன் வில்லன்னுதான் மொதல்லேர்ந்து காட்டுவாங்க. இங்க அப்படியா? அந்த படம் கூடதான் நல்லா இருந்திச்சு, சூப்பர் ஹிட்டா ஓடிச்சு. இந்தப் படம் ஊத்துகிச்சுதானே? அப்படின்னு கேப்பேன்னு நினைச்சீங்களா? அங்க தான் டைரக்டர்ரர்ர்று வெக்கிறாரு ட்விஸ்ட்ட. மேல்படிப்புக்காக ரஷ்யா போற கவுதம் சுப்பிரமணியம் அங்க ஒரு கொலை கேஸ்ல மாட்டிக்கிறாரு. மொழிப் பிரச்சினைக்கு உதவி செய்யிறதுக்காக ஆர்த்தி சின்னப்பா வர்றாங்க - ஏதோ ரகசிய ப்ளோ சார்ட் கண்டுபிடிக்கிறேன்னு உளவாளியா வர்ற சிவா லண்டன்ல தீவிரவாதியா புனைக்கப் பட்டு மாட்டிக்கிறாரு. அவருக்கு உதவி செய்ய வர்றவங்கதான் கீதா. இப்போ ட்ராக் கரெக்ட் ஆகிடுச்சா? இந்த வில்லன் அந்த வில்லனுக்கு ஒத்துப் போறானா? சொல்லப்போனா கவுதம்க்கு கூட கிராமத்து பிளாஸ்பேக் ஒன்னு இருக்கு ;)<br />
<br />
சந்தானம் காமெடி இருந்தும் வேஸ்ட் பண்ணிட்டாங்கப்பா, எமி ஜாக்சனுக்கு இன்னும் கொஞ்சம் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கலாமேப்பா? அட யார்ரா இவன், நானே லட்சுமி ராய்க்கு ஒரு குத்துப் பாட்டு கூட இல்லையே னு பீல் பண்ணிட்டு இருக்கேன், செகன்ட் பக்கெட்க்கு ட்ரீட் கேக்குற மாதிரி பேசிகிட்டு இருக்க. எவன்டா அவன் சிங்கம் படத்துல சூர்யா ஸ்டூல் போட்டு நடிச்ச மாதிரி போட்டோ அனுப்பினது? நீ உண்மையான போட்டோஷாப் டேவலப்பர்ணா இப்போ அனுப்பு சீயானுக்கு ஸ்டூல் போட்டு. இந்தப் பொண்ணு உசரத்துக்கு ஹீரோ புடிக்கனும்னா, சத்யராஜும் , அமிதாப் பச்சனையும் தான் புடிக்கணும்.<br />
<br />
தாண்டவம் -- காசுக்கு தண்டம் (நன்றி வினய் ;) )<br />
</div>
Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-42172657130824478312012-08-29T08:58:00.001+05:302012-08-29T08:58:56.563+05:30மணப் பாண்டம்…<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: white; color: #6b6b6b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 2; list-style: none; margin-bottom: 10px; margin-top: 10px; padding: 0px;">
சிறு துரும்பு, கல்,<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />கசடு நீங்க<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />உலர்ந்த மண்ணென சந்தித்தவ,<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />பதமாய் நீர் சேர்த்து<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />நம்மைப் பிசைந்து<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />களிமண்ணென சேர்ந்து கிடந்தவ,<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />சரியான பதம் பார்த்து<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />அள்ளியெடுத்து<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />மத்தியப் புள்ளியில் ஒன்றமர்ந்தவ,<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />இத்தருணம்<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />காதல் சக்கரம் சுழலத் துவங்குகிறது</div>
<div style="background-color: white; color: #6b6b6b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 2; list-style: none; margin-bottom: 10px; margin-top: 10px; padding: 0px;">
மத்திய அழுத்தம் சீராக்கி<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />படர்ந்து பரவ<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />விளிம்பு நோக்கி உரு தரித்தவ,<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />பொறுமையையும் பொறுமை ஆட்கொள்ள<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />கவனமே கருத்தென உயரம் வளர்ந்தவ,<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />தேவை சேர, கழிசல் நீங்க<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />ஈரப்பதம் சீராக்கி<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />சுற்றத்தாருக்கும் உருவம் புலப்பட்டவ,<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />இன்னும்<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />காதல் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது</div>
<div style="background-color: white; color: #6b6b6b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 2; list-style: none; margin-bottom: 10px; margin-top: 10px; padding: 0px;">
கருத்தாய் முழு உருவம்<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />முடிக்கும் தருணம்<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />ம்ம் எனும் ஒற்றைச் சொல்<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />உலர்தலுக்காக காத்திருக்கிறோம்<br style="list-style: none; margin: 0px; padding: 0px;" />இன்னமும் சக்கரம் சுழற்றிய படி</div>
</div>
Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-52433917841247907662012-07-30T06:40:00.001+05:302012-07-30T06:40:21.602+05:30காதல் சடுகுடு…<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
காதல் வலியெடுத்து<br />
உடம்பு முழுக்க நோகுதடி,<br />
முத்த ஒத்தடம்<br />
கொடுக்க வேணும்<br />
சீக்கிரமா வாடி புள்ள<br />
$<br />
#*#*#<br />
$<br />
கிளையுதிர்த்த இலையொன்று<br />
கிளையுடனான பற்றுதலை<br />
அசைபோட்டபடி அசைந்து<br />
வீழ்ந்து கொண்டிருக்கிறேன்<br />
தரை தொடும் முன்<br />
தாங்கிப் பிடிக்க வந்துவிடு<br />
$<br />
#*#*#<br />
$<br />
கடிகார மணற்துகளென<br />
உன் நினைவுகள்<br />
கரைந்து கொண்டிருக்கின்றன<br />
சீக்கிரம் என்னைப்<br />
புரட்டிப் போட்டு<br />
நிரப்பிவிடு<br />
$<br />
#*#*#<br />
$<br />
உன் காதல் எனக்கு<br />
கசக்கிறது<br />
கலப்படமில்லா தூய<br />
சாக்லெட் சுவையென<br />
#<br />
#*#*#<br />
$<br />
நித்தம் நித்தம்<br />
வேணான்டி<br />
ஒத்தை முத்தமொன்னு<br />
போதுமிப்போ<br />
பித்தாகிப் போன<br />
இந்தப் பாதகனுக்கு<br />
</div>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-64399771168744326862010-12-07T23:18:00.002+05:302010-12-07T23:18:44.959+05:30ராசாத்தி என் உசுரு என்னுதில்ல…மழைக்கால காலை நேரப் பயணமாய்<br />
உனைப் பின் தொடர்கிறேன் நான்<br />
நமக்குள் எல்லாம் முடிந்து விட்டதாய் சாலையின்<br />
சாக்கடையை வாரியிறைத்துப் போகிறாய் நீ<br />
சாக்கடை படிந்த என்னை முழுவதுமாய்<br />
நனைத்துப் போகிறது உன்னுடனான நினைவுகளின் பெருமழை!<br />
<br />
#<br />
<br />
இந்தப் பிறந்தநாளுக்கு பலமுறை வாழ்த்திய<br />
உனதன்பினில் மனமகிழ்ந்திருந்தேன்<br />
இனிவரும் எல்லாப் பிறந்த நாளுக்குமான<br />
மொத்தமான வாழ்த்துக்களே அவை<br />
என்றறிந்ததும் மன____________!<br />
(வரிகளை முழுமைப் படுத்திடும் வலிமை இல்லை எனக்கு)<br />
<br />
#<br />
<br />
மதிப்பிடவியலா தங்கத் தருணங்கள்<br />
உன் மீதான காதலில் என்றவனிடம்<br />
வாழ்வின் கொடுங்குற்றக் கனங்கள்<br />
என் மீதான காதல் என்கிறாய்<br />
தன் விசும்பல் ஒலியினை மறைத்து அழுதிட<br />
பேரிரைச்சலான இடங்களைத் தேடிப் போகிறது நம் காதல்!<br />
<br />
#<br />
<br />
மயானபூமியில் சதைப்பிண்டமாய் நானிருக்க<br />
எல்லாம் முடிந்து விட்டதென எரியூட்டிப் போகிறாய் நீ<br />
எரிந்து முடித்தபின் நெற்றிப்பொட்டு நாணயமாய்,<br />
மிஞ்சிய எலும்புத்துண்டுகளாய் நம் நினைவுகள்…!!!Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-27466932113054290302010-10-27T23:27:00.002+05:302010-10-27T23:27:56.106+05:30நீதான் என் தேசியகீதம்…<div style="margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: left;">உனக்குள் என்னையும், எனக்குள் உன்னையும்<br />
புதைத்துதான் நம் காதல் விதை வளர்கிறது என்கிறாய்…<br />
அது நம்மால் மட்டுமின்றி நம் பெற்றோரால்<br />
நீருற்றி வளர்த்திடப் படவேண்டுமென்கிறாய்…<br />
<br />
உன்னை எனக்கும், என்னை உனக்கும் பிடித்துப் போனதைவிட<br />
என்னை உன் வீட்டவர்க்கும், உன்னை என் வீட்டவர்க்கும்<br />
பிடித்துப்போக வேண்டுமே என கவலை கொள்வாய்<br />
பிறகு நீயே, ‘கண்டிப்பா பிடிக்கும்டா! எல்லார்க்கும்’<br />
என நம்பிக்கையுடன் தோள் சாய்ந்து முகம் புதைப்பாய்…<br />
<br />
ஒருவேளை நாம் நினைத்தபடி அவர்களுக்கு பிடிக்காது போயிடின்?<br />
என சில நிமிடங்கள் கவலை கொள்வாய்- பின் நீயே,<br />
‘ச்சே ச்சே. ஏண்டா இப்படி தப்பு தப்பாவே நினைக்கிறே?’ என<br />
என்னைக் கடிந்துகொள்வாய்…<br />
<br />
இருநாட்கள் உண்ணாவிரதம், அம்மாவிடம் புரியும்படி பேசி<br />
சம்மதிக்கவைப்பது, அப்பாவையும் அம்மா மூலமாக கவிழ்ப்பது<br />
என உனது வீட்டிற்கான உனது யோசனைகளையும் அவை நிச்சயம்<br />
வெற்றி பெறும் எனும் உனது நம்பிக்கையையும் கூறிவிட்டு…<br />
<br />
‘உங்க வீட்ல என்ன பிடிக்குமாடா?’ என குழந்தையாய்க் கேட்கிறாய்,<br />
உன்னுடன் பழகிய நாட்களில், எனக்கு உற்ற துணையாய் நீ இருப்பாய்<br />
என்பதை விட, என் பெற்றொருக்கு நல்லதோர் <strike>மரு</strike>மகளாய் இருப்பாய்<br />
என நம்பிக்கை கொண்டே நம் காதல் விதையை நான் விதைத்தேன்<br />
என்பதை எப்படி உனக்கு உணர்த்துவேனடி???</div>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-91278967349790729282010-10-27T23:26:00.000+05:302010-10-27T23:26:18.960+05:30காதலியில்லாக் காதல்…<div style="margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: left;">உறங்கியதும் கனவுத்திரை விரிகிறது,<br />
தோழர்கள், தோழிகள், உறவினர்கள் என<br />
விளையாடிட வருபவர்களிடமெல்லாம்<br />
‘அவள் வரும் நேரமிது. மன்னியுங்கள்’ எனக்<br />
கூறி வழியனுப்பிவிடுகிறேன், என்றுமே வந்திடாத<br />
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே<br />
<br />
வேகத்தடைப் பயணம், கூட்டமில்லா திரையரங்கம்<br />
கிழக்குக் கடற்கரை சாலையில் குழம்பியகம்<br />
மெல்லிய சாரலில் நெடுந்தூரப்பயணம் என<br />
ஒவ்வொன்றும் உன் நினைவை தூண்டிடத் துடிக்கின்றன<br />
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே<br />
<br />
இந்தப் பதிவில் உன் பெயரினை அறிவித்திட வேண்டும்<br />
அடுத்த பதிவிலாவது நிச்சயம் அறிவித்தேயாக வேண்டுமென<br />
எனக்குள் நானே நினைத்துக் கொண்டிருக்கிறேன்<br />
உன் பெயர் கூட எனக்குத் தெரியாத<br />
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே<br />
<br />
உனக்காக எழுதப்பட்ட குறுந்தகவல்கள்<br />
காதலர் தினங்களில் வாங்கப்பட்ட பரிசுகள்<br />
உன்னுடன் பகிர்வதற்கான சந்தோஷங்கள், துக்கங்கள்<br />
என அனைத்துமே உனக்காக காத்திருக்கின்றன<br />
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே<br />
<br />
இத்துனை நாளாய் கிறுக்கிய கிறுக்கல்கள் யாருக்கானவை<br />
எனக் கேட்டிடும் நட்பு வட்டங்களிடம் கூறாவிடினும்<br />
‘உனக்காகத்தான்’ என உன்னிடமாவது கூறிவிடத் துடிக்கிறேன்<br />
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே</div>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-42612260686103791972010-10-27T23:24:00.000+05:302010-10-27T23:24:21.753+05:30குறுந்தகவல்கள்…எடுக்க ஆளில்லாமல் கதறும்<br />
அழைப்பு மணியோசை நான்<br />
யாருமில்லா நேரம் மீண்டும் மீண்டும்<br />
அழைத்திடும் அழைப்புகள் நீ<br />
‘34 தவறிய அழைப்புகள்’ என<br />
திரையில் காட்டிடும் தகவல் நம் காதல்<br />
#<br />
உறக்கம் வர அழுதிடும் குழந்தை நான்<br />
தொட்டிலிட்டு எனைத் தாலாட்டும் அன்னை நீ<br />
உறக்கத்தில் தேவதை கண்ட குழந்தையின் புன்சிரிப்பு நம் காதல்<br />
#<br />
பறக்கத் துடிக்கும் இராக்கெட் பட்டாசு நான்<br />
என் திரியினைக் கொளுத்திடும் மத்தாப்பு நீ<br />
வெடித்துச் சிதறிடும் வாணவேடிக்கை நம் காதல்<br />
#<br />
இன்னிசைப் பாடல்களின் இசைத்தட்டு நான்<br />
என்னுள் எழுதியதை படித்திடும் மிண்ணனு இயந்திரப் பெட்டி நீ<br />
பொத்தானை அழுத்தியதும் கேட்டிடும் இன்னிசை நம் காதல்<br />
#<br />
சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி நான்<br />
எனைக் கவர்ந்திழுக்கும் அழகிய பூ நீ<br />
என்னால் சுமக்கப்படும் மகரந்தம் நம் காதல்<br />
#<br />
அகல் விளக்கு நான்<br />
என்னுள் ஊற்றிய நெய் நீ<br />
நம்மால் ஒளியூட்டப்பட்ட சுடர் நம் காதல்<br />
#<br />
நட்டு வைத்த விதை நான்<br />
என் மேல் ஊற்றிடும் நீர் நீ<br />
நம்மால் வளர்ந்திடும் செடி நம் காதல்Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-12609228063913507112010-09-20T23:55:00.000+05:302010-09-20T23:55:20.718+05:30பாஸ் என்கிற பாஸ்கரன்…<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI0CjPcmbueo7bGJ9twSok174CJWv7p2-V5aK0zIILqpeGixl0YGQKg5qYIGveQulGQ_i_LSatHg6ygGv_LYeuRowvF0BfDcP5TU4_aAb5hDqR7zXZD92NbYuBX0GbgA3Xx2jkyXx4hIE/s1600/boss270810_23.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI0CjPcmbueo7bGJ9twSok174CJWv7p2-V5aK0zIILqpeGixl0YGQKg5qYIGveQulGQ_i_LSatHg6ygGv_LYeuRowvF0BfDcP5TU4_aAb5hDqR7zXZD92NbYuBX0GbgA3Xx2jkyXx4hIE/s320/boss270810_23.jpg" /></a></div>ஆர்யா - பாஸ்கரன், நயன்தாரா - சந்திரிகா<br />
சந்தானம் - நல்லதம்பி, பஞ்சு சுப்பு - சரவணன்<br />
சித்ரா லக்ஷ்மணன் - சண்முக சுந்தரம், ராஜேந்திரன் - வேல்பாண்டி<br />
இசை - யுவன், இயக்கம் - M.ராஜேஷ்<br />
வெளியீடு - ரெட் ஜெய்ண்ட் மூவீஸ்<br />
<br />
படத்துக்கு டைட்டில் போடும் போதே 10.10னு மட்டுமே மணி காட்டுற கடிகாரத்துல நொடி முள் மட்டும் சுத்தி சுத்தி எழுத்துக்களை அழிக்கிற மாதிரி காமிச்சு டைரக்டர் ஏதோ சொல்ல வர்றாரு. அவரு என்ன சொல்ல வர்றார்னா?<br />
ஒண்ணும் சொல்ல வரல. அந்த கடிகாரம் ரிப்பேராகிப் போய் ஓடாம நிக்குது. அவ்ளோதான்.<br />
<br />
சந்தானம் ஹீரோவா நடிச்சிருக்கிற பாஸ் என்கிற பாஸ்கரன்ல, சாரி சாரி - ஆர்யா பாஸ்@பாஸ்கரனா நடிச்சிருக்கிற இந்த படத்துல சிவா மனசுல சக்தி எடுத்த அதே ஃபார்முலாவை யூஸ் பண்ணியிருக்காரு ராஜேஷ். கதைங்கிற வார்த்தைக்கு கூட ரெண்டு எழுத்து இருக்கு. ஆனா இந்த படத்துல???<br />
<br />
ஜாலியா ஊர் சுத்திகிட்டு அரியர்ஸ பல வருஷமா க்ளியர் பண்ண டிரை பண்ற பாஸ்கரை - சந்திரிகா கரெக்ட் பண்ணனும்னு பாக்குறாங்க. ஆனா வேலையில்லாதவருக்கு அப்பா பொண்ணு கொடுக்க மாட்டாரேனு அவர மொதல்ல லைஃப்ல செட்டில் பண்ணிட்டு அப்புறமா கரெக்ட் பண்றாங்க. பாஸ் கூட அவரோட ஃப்ரெண்ட் நல்லதம்பி. ‘நண்பேன்டா’ங்கிற ஒரு வார்த்தைக்காக அவரு படுற இம்சை இருக்கே. அய்யோய்யோய்யோ! இதுதான் பாஸ் என்கிற பாஸ்கரன்.<br />
<br />
சந்தானத்தை மட்டுமே நம்பி எவ்ளோ நாளைக்கு காலம் தள்ளுவீங்கன்னு தெரியல. படம் முழுக்க சந்தானம் சந்தானம் சந்தானம்தான். சொல்லப்போனா ஹீரோ இன்ட்ரொடக்சனுக்கு முன்னாடியே சந்தானம் இன்ட்ரோ. அதுவும் அந்த வழக்கமான அசட்டுச் சிரிப்போட. எவனோ ஓட்டின செகண்ட் ஹேண்ட் வண்டிக்கு அவரை வெச்சு புதுசா ரெஜிஸ்டர் பண்ற காமெடி, இன்னொரு ‘கிரி’ அக்கா ரகசியம்.<br />
<br />
படத்தோட பெயரே ஆர்யாவோட கதாபாத்திர பெயர்தான்கிறதால அவரும் காமெடி செஞ்சே ஆக வேண்டிய கட்டாயம். அவரும் அவரால முடிஞ்சதை டிரை பண்ணியிருக்காரு. சந்தானமே முழுசா டாமினேட் பண்ணிடறதால ஆர்யாவுக்கு கெத்து கொஞ்சம் கம்மியா இருக்கு. சி.ம.ச ல ஜீவாவுக்கு இருந்த அளவுக்கு அழுத்தமில்ல. படமும் அதே மாதிரிதான். சி.ம.ச -க்கு 6 மார்க் போடலாம்னா இதுக்கு 4 மார்க்.<br />
<br />
நயன்தாரா - கேக்கவே வேணாம். அம்மணிக்கு வயசாயிடுச்சுன்னு எல்லாரும் இந்த படத்தை பார்த்து கன்ஃபார்ம் பண்ணிடறாங்க. எப்பவும் போல ஹீரோயினுக்கு இந்த படத்துலயும் கேரக்டர் இல்லைங்கிறது கூட எனக்கு கோபம் இல்ல, ஹீரோவுக்கு வேலையே இல்லைனாலும் அவரை மாய்ஞ்சு மாய்ஞ்சு லவ் பண்றதுகூட எனக்கு கோபமில்லை, ஆனா அந்த லிப்-டு-லிப் சீன் வரும்போது கரெக்டா டைமிங் பார்த்து “அய்யய்யோ பிரபுதேவா பாவம்”னு எதுக்குய்யா தியேட்டர்ல ரன்னிங் கமெண்ட் கொடுக்குறீங்க? நாஞ்சென்ஸ். <img alt=":evil:" class="wp-smiley" src="https://ch1blogs.cognizant.com/blogs/175868/wp-includes/images/smilies/icon_evil.gif" /> <br />
<br />
சந்தானம் பத்தி இங்க சொல்லணும்னா படத்துல அவரு வர்ற ஒவ்வொரு சீனையும் சொல்லியே ஆகணும். அதனால படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. மங்கூஸ் மண்டை மாமா சித்ரா லக்ஷ்மண், அண்ணன் சரவணனா சுப்பு, அரியர்ஸ் சுவாமிநாதன்னு எல்லாருமே ஒரு சில காட்சிகள்ல வந்தாலும் சிரிக்க வெச்சிருக்காங்க. நான் கடவுள்ல அப்படி கொடூரனா நடிச்ச ராஜேந்திரன்?!?!? உங்கள மாதிரி ஆளுங்களை பாலா மட்டும்தான் பயன்படுத்திக்குவாரு. ஆர்யாவோட சிபாரிசுல இங்க சேர்ந்தீங்களா? <img alt=":roll:" class="wp-smiley" src="https://ch1blogs.cognizant.com/blogs/175868/wp-includes/images/smilies/icon_rolleyes.gif" /> <br />
<br />
ஷகீலா - ராஜேஷ் சார் எனக்கோரு உண்மை தெரிஞ்சாகணும். சி.ம.ச-லயும் இவங்க வந்தாங்க. இந்த படத்துலயும் வந்திருக்காங்க. இதுல ஏதாவது உள்குத்து இருக்கா ராஜேஷ் சார்? அதுலயும் அவங்க அந்த டுட்டோரியல்ல அந்த ஃபார்முலாவைதான் நடத்தணும்னு எதுக்கு செலக்ட் பண்ணினீங்க?<br />
<br />
இசை - யுவனின் வழக்கமான சரக்குல கிக் கொஞ்சம் கம்மியா இருக்கு. யார் இந்த பெண்தான் நல்லா இருக்கு. பாஸூ பாஸூ பாஸு, தத்தி தாவும் - ஓ.கே. அய்லே அய்லேவும், மாமா மாமா பொண்ண குடு-வும் படத்துக்கு தேவையே இல்ல. எரிச்சலூட்டுது ரெண்டும்.<br />
<br />
சி.ம.ச-ல பல்பு வாங்குற மாப்பிள்ளையா அடுத்த படமான இந்த ஹீரோ ஆர்யா வந்த மாதிரி, இதுல பல்பு வாங்க அடுத்த படத்தோட ஹீரோ உதயநிதி வருவாருன்னு எதிர் பார்த்தேன். ஆனா ஜீவாவே ‘சிவா’வா வந்து கடனை தீர்த்துட்டாரு.<br />
<br />
படத்துல நோட் பண்ண வேண்டிய ஒரு பொன்மொழி “பொண்ணுங்களை பொறுத்த வரைக்கும் பசங்க பல வகை. அதிகமா பேசினா போர் பார்ட்டி, பேசவேயில்லனா சாம்பார், சிரிச்சு சிரிச்சு பேசினா ஜொள்ளு, சிரிக்கலைனா பிதாமகன், இங்லீஷ்ல பேசினா பீட்டரு, தமிழ்ல பேசினா லோக்கலு. ஆனா பசங்களுக்கு - பொண்ணுங்க ரெண்டே வகை. ஒண்ணு சூப்பர் ஃபிகரு, இன்னொன்னு சப்ப ஃபிகரு” - நோட் பண்ணிகிட்டீங்களா?<br />
<br />
<br />
பாஸ் என்கிற பாஸ்கரன் - நல்லதம்பி என்கிற சந்தானம்…Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-52909321311542510162010-07-19T00:53:00.000+05:302010-07-19T00:53:35.414+05:30சும்மா இரண்டு கவிதைகள்...<strong>பால்(paul)</strong> <br />
<br />
<br />
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-<br />
<br />
இன்றைக்கு எந்த சட்டை போடுவது?<br />
<br />
கருப்பா? நீலமா?<br />
<br />
<br />
இன்னைக்கு அவகிட்ட சொன்னா?<br />
<br />
ஏத்துக்குவாளா? வேணாம்னு சொல்வாளா?<br />
<br />
<br />
இன்னைக்கு எந்த பதிவு போடலாம்?<br />
<br />
திரைப்பட விமர்சனமா? கவிதைகளா?<br />
<br />
<br />
இந்த முறை ப்ரொமோசன்?<br />
<br />
கிடைக்குமா? கிடைக்காதா?<br />
<br />
<br />
கூப்பிடுங்கள் பால்(paul) ஆக்டோபஸியை...<br />
<br />
<br />
<br />
<strong>பெட்ரோல் </strong><br />
<br />
<br />
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-<br />
<br />
அவளுக்கு நீதான் உயிர்<br />
<br />
நீயின்றேல் அவளில்லை<br />
<br />
அவளுக்காகவே உனை வாங்க வேண்டும்<br />
<br />
<br />
<br />
காந்தித்தாள் ஒன்றுக்கு முன்னொரு காலத்தில்<br />
<br />
2.26 தந்தனர் உனது உரிமையாளார்கள்<br />
<br />
பிறகு 2.12 வானது 2.06 ஆனது<br />
<br />
<br />
<br />
சமீபகாலமாக கூட 1.92 வாக வாரித்தந்தனர்<br />
<br />
தற்போது 1.79 க்கு மேல் ஒரு மில்லி கிடையாதாம்<br />
<br />
<br />
<br />
விலைவாசியாம், பட்ஜெட்டாம் - ஏதோதோ சொல்லி<br />
<br />
கடைசியில் ஒரு காந்தித் தாளுக்கு 1 மட்டுமே <br />
<br />
தருவார்கள் போலும்...Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-21286428855953627422010-07-13T00:31:00.000+05:302010-07-13T00:31:01.933+05:30அஸ்கலக்கடி லாலாசுந்தரி…“தம்பி இங்க வாப்பா. உன்னோட வலது கையால தலைய சுத்தி இடது காதை தொடு பாக்கலாம். ம்ம் கை முட்டுதா, அப்போ உன்ன சேர்த்துக்கலாம்” இப்படி சொல்லிட்டு பல்பத்தை(சிலேட் பென்சில்) பால்ல தொட்டு நாக்குல ‘அ’ போட்டாரு முருகையன் ஹெட்மாஸ்டர். இப்படிதான் நான் ஒண்ணாவது சேரும் போது ஊ.ஒ.து (ஊராட்சி ஒன்றிய துவக்கப்) பள்ளியில சேர்த்தாங்க.<br />
<br />
அதுக்கு முன்னாடி ஒரு வருஷம் பால்வாடி(அரை க்ளாஸ்-பேபி ஸ்கூல்). அதுவும் அங்க பக்கத்துலயேதான். அப்பா தினமும் காலையில சைக்கிள்ல கூட்டிட்டு வந்து விட்டுட்டு போவாரு என்னையும் அக்காவையும்.<br />
<br />
போன தடவ அண்ணா வீட்டுக்கு போனப்போ அண்ணாவும் அண்ணியும் எதையோ பெருசா சாதிச்ச சந்தோஷத்துல இருந்தாங்க. என்னன்னு விசாரிச்சப்போதான் தெரிஞ்சது, எங்க ஏரியாவுலயே பிரபலமான மெட்ரிக் ஸ்கூல் ஒண்ணுல ரெண்டு பேரும் இண்டர்வியூ க்ளியர் பண்ணி, பையனுக்கு அந்த ஸ்கூல்ல யூ.கே.ஜிக்கு சீட் வாங்கின விஷயம்.<br />
<br />
இந்த தடவை அண்ணா வீட்டுக்கு போனப்போ பையனைக் காணோம். எங்கனு கேட்டா டியூசனாம். யூ.கே.ஜி ஜாய்ன் பண்ணி 2 வாரம்தான் ஆகுது. நான் வந்திருக்கேன்னு போய் அன்னைக்கு ட்யூசனுக்கு பெர்மிஸன் வாங்கி பாதியில கூட்டிட்டு வந்தாங்க. வந்ததும் என்கிட்ட இருந்த சாக்லேட்ட வாங்கிகிட்டு தெரு பசங்களோட விளையாட போயிட்டான். அவங்களாம் பால்வாடி போகுற பசங்கனு நினைக்கிறேன். அதான் டியூசனுக்கு தப்பிச்சிட்டாங்க.<br />
<br />
அவன் சாக்லேட் வாங்கின வேகத்துல ஸ்கூல் பேக்கை என்மடிமேலயே வெச்சிட்டு ஓடிட்டான். உள்ளே திறந்தா, சன் பிக்சர்ஸ் படம் நூறாவது நாள்னு போஸ்டர் பார்த்த மாதிரி ஒரு அதிர்ச்சி. யூ.கே.ஜி பையனுக்கு 4 சப்ஜெக்ட். 4 புக். 4 நோட். தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணக்குனு. நல்லா சின்ன வயசுலயே படிப்பு சொல்லி கொடுத்தாதான் பதியும்ங்கிறது உண்மைதான். அதுக்காக இப்படியா?<br />
<br />
அட அது கூட பரவாயில்லைங்க, தமிழ் புத்தகத்தை அப்படியே புரட்டினேன். ஏதாவது என்னோட பால்வாடி காலத்து பாட்டு இருந்தா படிக்கும்போதே மனசுக்குள்ள பழைய நினைவுகள் வரும்ங்கிற நப்பாசையில. ஆனா அங்கயும் அதிர்ச்சி - S.A. சந்திர சேகருக்கு சிறந்த டைரக்டர்னு அவார்டு குடுத்த மாதிரி-<br />
<br />
ஆக்கு பாக்கு வெத்தலை பாக்கு டாம் டூம் டய்யா<br />
அஸ்கலக்கடி லாலாசுந்தரி கோலி கொப்பர<br />
டாம் டூம் டீம் டிஸ்ஸூ…<br />
<br />
இப்படி ஒரு கருத்தாழமிக்க பாடலை சிறுவர்களுக்கு யூ.கே.ஜியிலேர்ந்தே நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தே ஆகவேணுமில்லையா? யாரு அந்த அஸ்கலக்கடி லாலாசுந்தரி? சரி சுந்தரியைப் பற்றி பிறகு பேசுவோம்.<br />
<br />
இந்தியாவில் குறிப்பாய் தமிழ்நாட்டில் கல்வித்தரம் தற்போது எப்படி இருக்கிறது?<br />
<br />
யாரேனும் தற்போதைய மாணவர்களின் பாடப்பிரிவுகளை பார்த்திருக்கிறீர்களா? நாம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பாடங்கள் தற்போது எட்டாம் வகுப்பில், கல்லூரி பாடப்பிரிவுகள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு இறங்கிவிட்டன. அது என்னைக்கேட்டால் ஒரு வகையில் நல்ல விஷயம்தான், ஆனால் மாணவர்களின் கற்றறியும் திறன்???<br />
<br />
முன்னொரு காலத்தில் நாங்கள் டிரெயினிங்கில் இருந்த போது Weekend teaching activityகாக ஒரு சிறுவர்கள் இல்லம் போவோம். அங்குள்ள குழந்தைகள் அருகிலிருக்கும் அரசுப் பள்ளிகளில் பயில்வோர். அங்கு நாங்கள் ஒன்றும் பெரிதாக கற்றுக் கொடுத்துவிடவில்லை. நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு A,B,C,D மற்றும் பெருக்கல் வாய்பாடுகள்தான்.<br />
<br />
காரணம் மிகச்சாதாரணமான ஒன்று. நான்காம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் கிடையாது, அனைவருக்கும் தேர்ச்சி என்ற அரசின் அதிசிறந்த திட்டத்தின் வெளிப்பாடு இவை. இப்பொழுது எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்யப்போவது பற்றியும் பேசிக்கொண்டிருப்பதாக அறிந்தேன்.<br />
<br />
இவையெல்லாம் எந்த வகையில் கல்வித்தரத்தை உயர்த்துமென்பது அந்த திட்டம் தீட்டியவருக்கு மட்டுமே வெளிச்சம். ஒரு காலத்தில் சத்துணவு தருகிறோம் என்று அழைத்தனர். பிறகு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்த பெண் குழந்தைகளுக்கு திருமணத்தின் போது ரொக்கப்பணம் தருகிறோம் என அழைத்தனர். இப்போது படிக்கவே வேண்டாம் தினமும் பள்ளிக்கு வந்தாலே போதும் என, ஆடித்தள்ளுபடி விளம்பரங்களில் துணிக்கடைகளை மிஞ்சி நிற்கிறது கல்வித் தரம்.<br />
<br />
மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தால் மட்டுமே நல்ல படிப்பு கிடைக்குமென்பது ஆதிகாலம் தொட்டு வரும் வழக்கு. அதை இன்னும் நிரூபிக்கும் வகையில், பிறந்த குழந்தைக்கே கடிவாளம் போட்டு ஆங்கில வழிக் கல்வி முறைகள் தங்களை மேம்படுத்திக் காட்டிக் கொள்ள, அரசுப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் வந்து பெருக்கல் வாய்பாடு கற்றுக் கொண்டிருக்கிறார்கள் முருகேசனும், முனுசாமியும்.<br />
<br />
தரமான உணவு, உடை, உறைவிடம் மட்டுமே பணக்காரர்களுக்கு என்றது போய் இப்போது தரமான கல்வி வேண்டுமென்றாலும் உன் பாட்டன் சொத்து பெருமளவில் வேண்டுமென்ற நிலை உருவாகி வருகிறது… கல்வியையும் வியாபாரப் பொருளாக்கி வணிகம் செய்யும் பணப்பெருச்சாலிகள் குடைந்து கொண்டிருக்கும் வரை கல்விக் குதிரின் ஓட்டை பெரிதாகிக் கொண்டேதான் இருக்கும்…Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-80190418319630870622010-06-19T12:16:00.000+05:302010-06-19T12:16:07.572+05:30கேட்ட பாடல்…<span class="Apple-style-span" style="font-size: small;">“ஹாய் & ஹலோ. வெல்கம் டு வாழ்த்தலாம் வாங்க. நம்ம கூட பேச போற அடுத்த Caller” இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? ஆமாங்க தொ(ல்)லைபேசில பேசி பேசி பாட்டு போடுவாங்களே, அதைப் பத்தின பதிவுதான் இது.</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">முன்னாடி ஒரு காலத்துல தூர்தர்ஷன்னு ஒரே சேனல்தான் இருக்கும். ரிமோட்களெல்லாம் நிம்மதியா இருந்த காலம் அது. அப்போலாம் எங்க ஊர்லயே மொத்தம் 2 வீட்டுலதான் டிவி இருக்கும். Sutter வெச்ச Solidair டிவி நியாபகம் இருக்கா அதுதான். அப்புறம் ஊருக்கே பொதுவா பஞ்சாயத்து டிவி இருக்கும். ஊர்லயே 2 வீட்லனு சொன்னேன்ல, அதுல ஒண்ணு எங்க அத்தையாங்க வீடு. எல்லாரும் உக்காந்து பார்க்குற மாதிரி ஒரு இடத்துல டிவி இருக்கும். நிறைய பேர் பார்ப்பாங்க. எங்க அத்தை வீடுங்கிறதால நான் chairல உக்காரலாம், Volume குறைக்கலாம் கூட்டலாம். என்னோட மத்த நண்பர்களெல்லாம் பொறாமையா பார்ப்பாங்க. அந்த வயசுல அதுல ஒரு தனி பந்தா.</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">நானும் எங்க அக்காவும் ஸ்கூல் ஹோம்வொர்க்லாம் 7.30P.M மணிக்குள்ள எழுதிட்டு, 8.00P.M க்குள்ள சாப்பிட்டுட்டு அத்தை வீட்டுக்கு ஓடிருவோம். ம்ம்ம் சொல்ல மறந்துட்டேன், எங்க அத்தைக்கு 4 பொண்ணுங்க . ரொம்ப பொறாமைப்படாதீங்க எல்லாரும் என்னை விட பெரியவங்க </span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"> . 7.55 க்கெல்லாம் அத்தை வீட்ல ஆஜர். அய்யாதான் டிவிய ஆன் பண்ணுவேன். 7.59க்கு செய்திகளுக்கு Count down ஸ்டார்ட் ஆனதுமே நானும் எங்க அக்காவும் ஒரு பந்தயம் கட்டுவோம் ‘இன்னைக்கு செய்தி வாசிக்கப்போற ரெண்டு பேருமே லேடீஸ்-னு நானும், இல்ல ரெண்டுமே Gentsனு எங்க அக்காவும். அப்படி ஒரு ஆண், ஒரு பெண்-னு பந்தயம் வெச்சா யார் மொதல்ல வணக்கம் சொல்வாங்கன்னும் சேர்த்து சொல்லணும்.</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
பந்தயத்துல யார் ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு இன்னொருத்தர் அடுத்த நாள் ஸ்கூல் போகும்போது ஜவ்வு மிட்டாய் வாங்கித்தரணும். அதுக்குதான் பந்தயமே. நிறைய தடவ நான்தான் ஜவ்வுமிட்டாய் வாங்குவேன். அக்கா வாங்குனாலும் பாதி தந்திருவா. (தரலைணா நானே புடுங்கிருவேன்னு தெரியும் அக்காவுக்கு). இது அத்தை வீட்ல.</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">வெள்ளிக்கிழமை ஆச்சுன்னா பஞ்சாயத்து டிவி பார்க்க போயிடுவேன். ஏன்னா 7.30க்கு ஒளியும் ஒலியும் போடுவாங்க. அதுல இன்னைக்கு ரஜினி பாட்டு போடுவாங்க, எம்.ஜி.ஆர் பாட்டு போடுவாங்கன்னு நண்பர்கள் கூட பந்தயம். இந்த பந்தயத்துல ஜெயிச்சா ஜவ்வு மிட்டாயில்ல, அடுத்த சனி ஞாயிறுல வாடகை சைக்கிள் எடுத்தா அதுல 2 ரவுண்டு ஓட்டத் தரணும். அதெல்லாம் ஒரு காலம். ப்ப்ச்ச்… </span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">இப்போ எதுக்கு இந்த மொக்கைய போட்டேன்னா அப்போவெல்லாம் ஒளியும் ஒலியும்தான் பாட்டு போடுற ஒரே நிகழ்ச்சி. பழைய பாடல்களைக்கூட ஆட்டம் போட்டு ரசிச்சு பார்ப்போம். அப்புறம்தான் டிஷ் ஏண்டனா, கேபிள் டிவினு ஆக்கிரமிப்புகள் அதிகமாச்சு. கேபிள் டிவியெலாம் வந்த அப்புறம் எங்க வீட்லயே டிவி வாங்கிட்டாங்க. அப்போ எனக்கு பிடிச்ச நிகழ்ச்சி ‘பெப்ஸி உங்கள் சாய்ஸ்’. போன் பண்ணி உமா ஆண்ட்டிகிட்ட நமக்கு பிடிச்ச பாட்டு கேட்டா அவங்க அந்த பாட்டு போடுவாங்க.</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">அந்த நிகழ்ச்சி எங்க அம்மாவுக்கும் ரொம்ப பிடிக்கும். எல்லா பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும். ஏன்னா பெப்ஸி உமா வித விதமா அழகழகா புடவை கட்டிகிட்டு வருவாங்க. ஆனா அது எப்பவோ எடுத்துட்டு கொஞ்ச நாள் கழிச்சுதான் டெலிகாஸ்ட் பண்ணுவாங்க.</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">அப்புறம்தான் லைவ் டெலிகாஸ்ட் கான்செப்ட் வந்திச்சு. அவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு கால் பண்ணிட்டு நாம பேசுறத நாமளே கேக்க முடியாது. அதுவாவது பரவாயில்ல நாம கேக்குற பாட்டாவது போடுறாங்களானா அதுவும் கிடையாது.</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
நான் காலேஜ் ஹாஸ்டல்ல படிக்கும் போது, (நம்ம எப்போ படிச்சோம்) இருக்கும் போது lunch முடிச்சிட்டு மறுபடி க்ளாஸ் போறதுக்கு 10- 15 நிமிசம் டைம் இருக்கும். அந்த கேப்ல 2 பாட்டு கேக்கலாம்னு எஃப்.எம் போடுவோம். ‘கோடைப்பண்பலையில் இது கொடைக்கானல்’. 3 நிமிசம் விளம்பரம் ஓடும், அப்புறம் இந்த பாடலை விரும்பி கேட்ட நேயர்கள்னு 5 நிமிசத்துக்கு ஒரு பெரிய லிஸ்ட் படிப்பாங்க. அப்புறம் பாட்டு போடும்போது கிளம்பி க்ளாஸ் போயிடுவோம்.</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">லைவ் டெலிகாஸ்ட் வந்தாலும் வந்துச்சு, கூடவே ஸ்பான்சர்ஸ் - விளம்பரங்களும் வந்திருச்சு. முன்னாடியெல்லாம் நிகழ்ச்சிக்கு நடுவுலதான் விளம்பரம் போடுவாங்க. இப்போ விளம்பரங்களுக்கு நடுவுலதான் நிகழ்ச்சியே. அதுவும் கால் பண்ணினா எவ்ளோ நேரம் வெயிட்டிங்க்ல இருக்கணும் தெரியுமா. ஆனா பேசுறது என்னமோ 2 நிமிசம்தான். அதுவும் நாம கேக்குற பாட்டு கூட போட மாட்டாங்க . இப்போ இருக்கிற நிகழ்ச்சியெல்லாம் பெண்களுக்கு பிடிக்கிறதில்ல. ஏன் தெரியுமா? பெப்ஸி உமா அழகழகா புடவை கட்டிட்டு வருவாங்க பிடிச்சது, ஆனா இப்போ வர்றவங்கதான் டிரஸ்ஸே போடுறதில்லயே? அட ஒழுங்காவே டிரஸ் போடறதில்லைனு சொல்ல வந்தேம்ப்பா. எப்பவும் தப்பு தப்பாவே நினைக்கிறது. </span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">அதுவும் காலையில 8 -10 வாழ்த்துக்கள் சொல்ற நிகழ்ச்சியிருக்கே. ரொம்ப மோசம், ‘அடுத்த காலர் பார்க்கலாம்னு’ சொல்வாங்க, பெயர் கேட்டுட்டு யாருக்கு வாழ்த்துக்கள்னு கேப்பாங்க. அவங்க சொல்லிகிட்டு இருக்கும் போதே கால் கட் பண்ணிட்டு, ‘கட் ஆய்டுச்சுனு; ஈஈனு பல்ல காட்டிட்டு பாட்டு போட்ருவாங்க. பாட்டும் முழுசா போட மாட்டாங்க, 2 லைன் போட்டுட்டு விளம்பரம் போட்ருவாங்க. நாஞ்சென்ஸ்… </span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">இப்படியே போச்சுன்னா கால் பண்றவங்க பெயர் மட்டும் கேட்டுகிட்டு ‘அவர் வாழ்த்தணும்னு நினைச்சவங்களுக்காக இந்த பாட்டு, இந்த பாட்டு போடணும்னு நினைச்சதுக்காக விளம்பர இடைவேளைனு’ கிளம்பிடுவாங்க. அதுவும் இல்லைனா Loud speaker போன்ல ரிங் அடிக்கிற சத்தம் மட்டும் கேட்க வெச்சிட்டு, ‘இதோ நமக்கு யாரோ ஒருத்தர் கால் பண்ண டிரை பண்றாரு, அவர் கால் பண்ணனும்னு நினைச்சதுக்காக பாடல் பார்ப்போம், பாடலுக்காக விளம்பரம் பார்ப்போம் கிளம்பினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல </span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">இப்போவும் பந்தயம் கட்டுவோம் ரூம்ல. ‘இன்னைக்கு VJ நல்ல ஃபிகர் வந்திருக்கும்னு. எங்க நடக்குது . தினமும் பந்தயத்துல தோல்விதான். மகாலக்ஷ்மி செல்லம் போனதுக்கப்புறம், திவ்யா அப்புறம் இப்போ நிஷா. ஏதோ இவங்களை நினைச்சு மனச தேத்திகிட்டு இருக்கேன். வேற என்ன பண்றது? </span>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-55019438076427858122010-06-19T12:11:00.000+05:302010-06-19T12:11:40.197+05:30மழையும் கொடூர யோசனைகளும்…<span class="Apple-style-span" style="font-size: small;">மழை வந்துச்சுன்னா மழையிலயிருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு ஏதோ என்னோட குட்டி களிமண்ணுல ச்சீ… மூளையில தோணின சில யோசனைகள்…</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><b>கொடூர யோசனை#1:</b></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">காலையில எந்திரிக்கும் போது மழை வந்துகிட்டு இருக்கு. ஆஃபீஸ் போலாமா வேணாமானு ஒரு பெரிய சந்தேகம். அது தினமும்தான் இருக்கும். இன்னைக்கு மழை வேற வருது. உடனே நீங்க உங்க TL, மேனேஜர், Team mates எல்லார்க்கும் கால் பண்ணி நான் இன்னைக்கு கண்டிப்பா ஆஃபீஸ் வருவேன்னு சொல்லிடுங்க. முடிஞ்சா வீட்டுக்கு வெளிய வந்து நின்னு சத்தம் போட்டு கூட சொல்லுங்க மழைக்கு கேக்குற மாதிரி. சொல்லிட்டு கபால்னு போய் இழுத்து போர்த்தி தூங்கிடுங்க.</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">நீங்க வெளிய வருவீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்து மழை ஏமாந்து போகும்ல?<br />
************************************************************************************</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><b>கொடூர யோசனை#2:</b></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><b><br />
</b></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">ஐடியா 1னோட உல்ட்டா. கால் பண்ணி ‘இன்னைக்கு நான் ஆஃபீஸ் வர மாட்டேன்’னு சொல்லிட்டு திடீர்னு கிளம்பி ஆஃபீஸ் போய்டுங்க.</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">நீங்க இன்னைக்கு ஆஃபீஸ்க்கு லீவ்னு நினைச்சுகிட்டு இருந்த மழை ஏமாந்து போகும்ல?<br />
************************************************************************************</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><b>கொடூர யோசனை#3:</b></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><b><br />
</b></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">மழை வந்ததும் போய் உங்க வீட்டு கதவு கிட்ட ஒளிஞ்சுக்கோங்க. அப்புறமா திடீர்னு வெளிய வந்து மழைய தொட்டு ‘ஐஸ், ஐஸ்’னு கத்துங்க. அப்போ மழையே மறுபடி ‘OUT’ ஆயிடும். அப்புறம் மறுபடி அது 1..2..3 count பண்ண போயிடும்ல?<br />
************************************************************************************</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><b>கொடூர யோசனை#4:</b></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><b><br />
</b></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">மழையின் முக்கியமான நொக்கமே நம்மளை நனைக்கிறதுதான். அதனால நீங்க அஃபீஸ்க்கு கிளம்பி, நல்ல neatஆ அயர்ன் பண்ணி டிரஸ் போட்டுகிட்டு நேரா போய் ஷவர்ல நின்னோ இல்லையின்னா ஒரு பக்கெட் தண்ணிய எடுத்து ஊத்தியோ உங்களை ஃபுல்லா நனைச்சுக்கோங்க. துளி கூட நனையாம இருக்கக்கூடாது. ஓ.கே வா? அப்படியே கிளம்பினீங்கன்னா மொதல்லயே நனைஞ்ச உங்கள நனைக்க முடியாம மழை ஏமாந்து போகும்ல பாவம்? ஆனா நீங்க முழுசா நனையாம வெளிய வந்தீங்கன்னா மழைக்கு கொண்டாட்டம்தான்.<br />
************************************************************************************</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><b>கடைசியா கொடூர யோசனை#5:</b></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><b><br />
</b></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">‘ஒழுங்கா போயிடு. இல்லையின்னா இந்த போஸ்ட்ட printout எடுத்து (மழையில) நனைச்சு உன்னை படிக்க வெச்சிருவேன்’னு மிரட்டுங்க. அப்புறம் பாருங்க…… </span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"> இதைப்படிச்சதுமே உங்களுக்கு எனக்கு ஏதாவது குடுக்கணும் போல தோணும். உங்க அன்புக்கு நன்றி.மக்களே எதுவாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். தீர்த்துட்டா அப்புறம் பேச முடியாது பாருங்க. ஹோக்கே???</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">இன்னும் இது மாதிரி பல பல யோசனைகள் இருக்கு. நீங்க ஓ.கே சொன்னா அடுத்தடுத்த பதிவுகள்ல வழங்கிடறேன். என்ன சொல்றீங்க? டீலா? நோ டீலா???</span>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-26895758058346017002010-06-19T12:07:00.000+05:302010-06-19T12:07:35.839+05:30என் தேவதைக்கு…(cont)<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnL1ySzYdWleIRDu-VesvOW0U5MeebtnsdKZRkssr2z468-nA5OiiEhyphenhyphenzb-WStZdOMbPNXBUttW73HPSmM3vtCvut8w3fw8Kb-CLTVj0KLazJmYx9B14N1-M5JP5bOKu8w2MpricCnjLY/s1600/love_relationships-anime-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><b><span class="Apple-style-span" style="font-size: small;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnL1ySzYdWleIRDu-VesvOW0U5MeebtnsdKZRkssr2z468-nA5OiiEhyphenhyphenzb-WStZdOMbPNXBUttW73HPSmM3vtCvut8w3fw8Kb-CLTVj0KLazJmYx9B14N1-M5JP5bOKu8w2MpricCnjLY/s320/love_relationships-anime-2.jpg" /></span></b></a></div><div class="separator" style="clear: both; text-align: left;"><b><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span></b></div><br />
<b><span class="Apple-style-span" style="font-size: small;">ஊரெல்லாம் அடைமழை - அதன் விளைவால்<br />
என் மனமெல்லாம் உன் நினைவு மழை<br />
மழையில் நனைந்தபடி நடப்பது உனக்கு மிகவும் பிடிக்கும்<br />
எனக்கும்தான் - உடன் கைகோர்த்து நடப்பது நீயென்றால்…</span></b><br />
<b><span class="Apple-style-span" style="font-size: small;">*************************************************************</span></b><br />
<b><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span></b><br />
<b><span class="Apple-style-span" style="font-size: small;">இதோ இப்பொழுதும் மழையில் நனைந்தபடி நடக்கிறேன்<br />
ஆனால்,”அவளின்றி நீ மட்டும் ஏன் தனியே?”<br />
என் ஒவ்வொரு மழைத்துளியும் என்னைத்<br />
தொடவில்லை - சுடுகிறது…<br />
*************************************************************</span></b><br />
<b><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span></b><br />
<b><span class="Apple-style-span" style="font-size: small;">எப்போதும் நடக்கையில் பொது இடமென்று<br />
கை மட்டும் கோர்த்து நடப்பாய்<br />
மழையில் நடப்பதென்றால் மட்டும் தோள் சாய்வாய்<br />
அதற்காகத்தான் சரியாக 5 அடி 5 அங்குலமே வளர்ந்தாயோ?<br />
உன் சிரம் என் தோள் சாயும் உயரத்திற்கு?</span></b><br />
<b><span class="Apple-style-span" style="font-size: small;">*************************************************************</span></b><br />
<b><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span></b><br />
<b><span class="Apple-style-span" style="font-size: small;">“மழை வரும் போல இருக்கு. குடை எடுத்திட்டு வரேன்”னு<br />
சொன்னேல - எங்கடா? என்றேன் நான்.<br />
“இதோ இங்கே” என சிரித்தபடி போர்த்தினாய் துப்பட்டாவை<br />
தூறல் ஆரம்பித்ததும் நடந்தோம் சிறிது தூரம்<br />
“குளிருதுப்பா” என நெருங்கினாய் என்னருகே<br />
அங்கே நம்மிடையே புகுந்து வெளியேற முயன்ற<br />
காற்றும் தோற்றுத்தான் போனது! ‘குளிருக்கு நன்றி’</span></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIaMwXlnAAaTtCI0fZ-0Ro-aiwZegkkt1zwYLWc-TUwhVOWlSWaXkEd1XMrBqvN5UX8GL8eCCYELtggcTTmh_nDqoJ50ZfNLONo9TTPwT5Z2B060kZJ2w1vW14TUdYvZIuZPI2pOJ4LnA/s1600/love_relationships-anime-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIaMwXlnAAaTtCI0fZ-0Ro-aiwZegkkt1zwYLWc-TUwhVOWlSWaXkEd1XMrBqvN5UX8GL8eCCYELtggcTTmh_nDqoJ50ZfNLONo9TTPwT5Z2B060kZJ2w1vW14TUdYvZIuZPI2pOJ4LnA/s320/love_relationships-anime-2.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: left;"><br />
</div><b><span class="Apple-style-span" style="font-size: small;"></span></b><br />
<b>உறவுகளுக்கும் ரத்த பாசங்களுக்கும் தர விருப்பமில்லை<br />
உனக்கு மட்டும், உனக்காக மட்டுமே தருவதே என் விருப்பம்<br />
என்னிடமிருந்தால் பாசத்தில் தந்துவிடுவேன் - அதனால்<br />
<br />
நீயே பத்திரமாக வைத்துக்கொள் எனது இதயத்தை<br />
நான் வேண்டுமானால் மற்றவர்களிடம் பொய் சொல்லிக்கொள்கிறேன்<br />
‘அதை துலைத்துவிட்டேன். துலைத்த இடம் மறந்துவிட்டேன்’ என<br />
#############################################################<br />
<br />
மறக்க முடியா நிகழ்வு எதுவென கேட்பவர்களுக்கு<br />
எத்துணைதான் சொல்வது? உன்னுடனிருந்த ஒவ்வொன்று நொடியையும்?<br />
<br />
வேண்டுமானால் கடைசியாக நடந்தது என இதைச் சொல்லிவிடவா?<br />
<br />
சென்ற வாரம் உலகம் அழிவதைப் பற்றி சொல்லும் திரைப்படத்திற்கு<br />
இரவுக்காட்சிக்கு ‘தேவி’ திரையரங்கம் போய் வந்ததை?<br />
<br />
திரைப்படம் முடிந்து நள்ளிரவு 1 மணிக்கு<br />
யாருமற்ற மவுண்ட் ரோட்டில் நீயும் நானும் மட்டும் பயணிக்க<br />
இரவு பெய்துவிட்டு போன மழை குளிர் காற்றை மிச்சம் விட்டுப் போயிருக்க<br />
<br />
வேகமாகப் போனால் உன்னுடனான பயணமும்<br />
வேகமாய் முடிந்திடுமே என மிதவேகத்தில் பயணம் தொடர<br />
<br />
எதுவும் வேண்டாமென சிகப்பு விளக்குமின்றி,<br />
எது வேண்டுமானாலும் செய்யென பச்சை விளக்குமின்றி,<br />
அழகாய் காதல் செய்யென மஞ்சள் விளக்குமட்டும்<br />
அணைந்து அணைந்து எரிந்தபடி சிக்னல்களும் சிம்பாலிஸம் காட்ட<br />
<br />
குளிரை விரட்டுவதாய் (குளிருக்கு நன்றி) மிக லாவகமாய்<br />
நீ இறுக்கி அணைத்த போது உன் ஸ்பரிசமும் கதகதப்பும்<br />
போதும் எனக்கு என் மீதான் உனது காதலை புரிந்து கொள்ள…</b>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-45744952893368097472010-06-19T11:59:00.000+05:302010-06-19T11:59:48.631+05:30என் தேவதைக்கு…<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE8dT8t_fggIX0GAcEcfXkg1IEH43pTNbTko0rUtGqUjFyPeApBUkMfTrQJbheIibx9V1tnGHyDaWZvt_WANgrz0gczWbqCD7CdBflbEuJFJObipBS48nyR3NgPovVNmRwNx9aIZmddn0/s1600/love_relationships-anime-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE8dT8t_fggIX0GAcEcfXkg1IEH43pTNbTko0rUtGqUjFyPeApBUkMfTrQJbheIibx9V1tnGHyDaWZvt_WANgrz0gczWbqCD7CdBflbEuJFJObipBS48nyR3NgPovVNmRwNx9aIZmddn0/s320/love_relationships-anime-2.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: left;"></div><h2><span class="Apple-style-span" style="font-size: medium; font-weight: normal;">ஆனாலும் நீ கொடுமைக்காரி…</span></h2><div> சாப்பிட சரியாக 3 நிமிடமே தருகிறாய்,<br />
அடுத்த நொடியில் அழைப்பு - “இன்னுமா சாப்பிடற?”<br />
சற்று உனது பாசக்கொடுமையை தளர்த்து<br />
உன்னுடன் நள்ளிரவு தாண்டியும் பேசுவதற்காகவாவது<br />
சற்று அதிகமாக சாப்பிட்டுக்கொள்கிறேன்<br />
<span style="color: maroon;"><br />
</span><br />
<span style="color: maroon;">###</span><br />
<span style="color: maroon;"><br />
</span><br />
இந்த விளையாட்டு எனக்குப் பிடிக்கவேயில்லை செல்லம்<br />
நமது ஒவ்வொரு சந்திப்பிற்கும் வீட்டில்<br />
எனது மாமனார் மாமியாரிடம் நீ பொய் சொல்வதும்,<br />
உனது மாமானார் மாமியாரிடம் நான் பொய் சொல்வதும்.<br />
என்றுதான் முடிவுறும் இந்த பொய் விளையாட்டு?<br />
<span style="color: maroon;"><br />
</span><br />
<span style="color: maroon;">###</span><br />
<span style="color: maroon;"><br />
</span><br />
உன்னிடம் பிடிக்காதது-<br />
எவ்வளவு முத்தக் கோரிக்கைகள் கேட்டாலும் நிராகரிப்பது<br />
உன்னிடம் பிடித்தது-<br />
நீ மட்டும் கோரிக்கையோ அறிவிப்போயின்றி எனக்கு தருவது<br />
அதென்ன வாங்குவதை விட தருவதில் உனக்கு அப்படியொரு இன்பம்?<br />
<span style="color: maroon;"><br />
</span><br />
<span style="color: maroon;">###</span><br />
<span style="color: maroon;"><br />
</span><br />
நமது கடைசி சந்திப்பில் <span style="color: maroon;"><br />
</span>புறப்படும்போது கேட்டாய், “உன்னை கிள்ளிக்கட்டுமா என்று?”<br />
வேண்டாம் வலிக்கும், எனக்கல்ல உன் செல்லத்திற்கு என்றேன்<br />
மிகவும் வற்புறுத்தினாய்<br />
நானும் “சரி ஒரே முறை மட்டும்” என சம்மதித்தேன்<br />
உதட்டால் உதடு கிள்ளுவாய் என அறியாமல்<br />
என் அறிவை என்ன சொல்ல என் கள்ளி?<br />
<br />
<br />
<br />
</div>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-47403223589491694022010-06-13T00:30:00.001+05:302010-06-13T00:31:25.367+05:30இரண்டு கவிதைகள் - 3...<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv1pJ93f32BSlxPMUQIziSQa2_f42mIwPMh2jLgvdU-M8qlp8Paz7YCqG-pri5KnfE5_VmsFbRs2YuWTRzeyApJnVSXgnoNZXVoKUHD55lLOvfNsHRRhKMu_VspbmBSDmYPZJlX3sO73c/s1600/2039080178.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv1pJ93f32BSlxPMUQIziSQa2_f42mIwPMh2jLgvdU-M8qlp8Paz7YCqG-pri5KnfE5_VmsFbRs2YuWTRzeyApJnVSXgnoNZXVoKUHD55lLOvfNsHRRhKMu_VspbmBSDmYPZJlX3sO73c/s320/2039080178.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span class="Apple-style-span" style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px;"></span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="line-height: normal;"></span></div><h2 style="font-family: Georgia, Arial, serif; font-size: 20px; font-weight: normal; line-height: 1.4em; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;">தேவதை விளையாட்டு...</h2><div><br />
</div><br />
<div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;">நேற்று நீ கேட்டதற்காக திடீர் சந்திப்பு</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">என்னைப் பார்த்ததில் உனக்கு அவ்வளவு மகிழ்ச்சி</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">ஐஸ்கிரீம் பார்த்த சிறுபிள்ளை போல…</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;">போன சனிக்கிழமை முழுக்க உன்னுடன் ஊர் சுற்றியது</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">எதுவுமே நடக்காதது போல, வெகுநாட்கள் கழித்து பார்த்தது போல</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">இது என்ன புதிதா? ஒவ்வொரு முறையும் நீ இப்படித்தான்</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;">கைகோர்த்து நடந்தோம். 5 நிமிட நடையில் சேரும் இடம் அது</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">ஆனால் 30 நிமிடங்களாக்கினாய் நடையை…</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">அந்த வித்தை உனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;">தெருவில் மற்றவர்கள் கண்ணிலோ பொறாமைப்பெருக்கு…</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;">வழக்கமான நமது மரத்தடியில், நான் அமர்ந்தேன்</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">என் தோள் சாய்ந்தபடி நீயும் அமர்ந்தாய்</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;">சிறிது நேர மவுனம், பிறகு வெகு நேரம் பேச்சு</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">அனைத்தையும் ரசித்தபடி உன்னுடன் பேசிக்கொண்டிருந்தேன்</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">பிறகு பிரிய மனமின்றி இருவரும் அவரவர் உறைவிடம் சேர்ந்தோம்</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;">இன்று காலையில்,</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">“இவனுக்கு முத்திருச்சுடா. ராத்திரி முழுக்க என்னை</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">பிராண்டிட்டே இருந்தான். தனியா ஏதோதோ பேசினான்டா.</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">சீக்கிரமே கீழ்ப்பாக்கம் கூட்டிட்டு போகணும்” - அறைத்தோழன் கூற்று</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span></div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="font-size: small;">பாவம் அவனுக்கெப்படி தெரியும் தேவதையே? நேற்று நீ என்னுடன் விளையாடியது?</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;">உன் நினைவுகளின் விளையாட்டால் எனக்கு புதிய பெயர் “பைத்தியக்காரன்”</span></div><div style="line-height: 21px;"><br />
</div><div style="line-height: 21px;"><span class="Apple-style-span" style="line-height: normal;"></span></div><h2 style="font-family: Georgia, Arial, serif; font-size: 20px; font-weight: normal; line-height: 1.4em; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;">என்னவள்...</h2><div><br />
</div><div><div style="line-height: 21px;"><span style="color: maroon;"><span class="Apple-style-span" style="font-size: small;">உனக்காக எழுதி எழுதித் தீர்ந்துவிட்டதடி<br />
எனது குறிப்பேட்டின் பக்கங்களும் பேனா மையும்,</span></span></div><div style="line-height: 21px;"><span style="color: maroon;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span> </span></div><div style="line-height: 21px;"><span style="color: maroon;"><span class="Apple-style-span" style="font-size: small;">ஆனால் உன் கண்கள் என்னுள் உண்டாக்கிய தாக்கத்தால்<br />
நான் கிறுக்கிய வரிகளே இன்னும் முடியவில்லையடி</span></span></div><div style="line-height: 21px;"><span style="color: maroon;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span> </span></div><div style="line-height: 21px;"><span style="color: maroon;"><span class="Apple-style-span" style="font-size: small;">உன்னை முழுக்க கவிதைகளால் கிறுக்கித்தள்ளினால்???</span></span></div><div style="line-height: 21px;"><span style="color: maroon;"><span class="Apple-style-span" style="font-size: small;">நிச்சயமாய் போதாது, குறிப்பேட்டின் பக்கமோ, பேனா மையோ மட்டுமல்ல</span></span></div><div style="line-height: 21px;"><span style="color: maroon;"><span class="Apple-style-span" style="font-size: small;">எனது ஆயுளும்தான்,</span></span></div><div style="line-height: 21px;"><span style="color: maroon;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span> </span></div><div style="line-height: 21px;"><span style="color: maroon;"><span class="Apple-style-span" style="font-size: small;">உனது கண்கள் கவிதையாகவே எனது ஆயுளில் மூன்றில் ஒன்று தீர்ந்துவிட்டதடி<br />
உன்னை முழுவதுமாக கவிதையாக்க எனக்கும் ஆசைதான்</span></span></div><div style="line-height: 21px;"><span style="color: maroon;"><span class="Apple-style-span" style="font-size: small;">பொறாமை பிடித்த கடவுள் சதி செய்கிறாரே? நான் என்ன செய்ய?</span></span></div><div style="line-height: 21px;"><span style="color: maroon;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span> </span></div><div style="line-height: 21px;"><span style="color: maroon;"><span class="Apple-style-span" style="font-size: small;">அப்படி நிகழுமெனில் அந்த பொறாமைக் காரனிடம் நிச்சயம் மன்றாடுவேன்<br />
“நீ பூமிக்கு அனுப்பி வைத்த தேவதைக்கு<br />
கடிதம் ஒன்று அனுப்ப வேண்டும்.<br />
மேலோகத்தில் ஒரு தபால் நிலையம் உருவாக்கு” என்று</span></span></div></div>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-17691724440288039762010-06-13T00:24:00.000+05:302010-06-13T00:24:12.438+05:30சாலையோர தேவதை...<div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">நான் வேண்டாமென்றாலும் என் கண்கள் நிறுத்தியதேயில்லை,<br />
எனக்கான தேவதையைத் தேடும் படலத்தை…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">அன்றும் அப்படித்தான்-</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
எங்களது பேருந்து நிறுத்தத்தில் வெள்ளை சுடிதாரில் ஒரு தேவதையைக் காட்டியது</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">சாலையின் எதிர்புறம் அவள் - மறுபுறம் நான்</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
நினைவுகளில் மனம் எங்கெங்கோ பறக்க<br />
பார்வை அம்புகள் மட்டும் அவள் மேலே…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">எல்லா தேவதைகளுக்குமே ஒரு ஒற்றுமை,<br />
தன்னைப் பார்க்கும் அழகான ஆண்களை <span style="color: #993300;">(புரியுது)</span> - சுமாரான ஆண்களை <span style="color: #993300;">(சரி விடுங்க)</span>தன்னைப் பார்க்கும் ஆண்களை <span style="color: #993300;">(இப்போ சந்தோசமா?)</span> பொய்க்கோபத்துடன் முறைப்பதில்,</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">ஆனால் இந்த முறைப்புதான் முதல் கட்ட வெற்றி…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><span class="Apple-style-span" style="line-height: normal;"></span></div><div style="line-height: 21px;">இப்படியே ஐந்து நிமிடம் கழிய, திடீரென வந்து நின்றது ஒரு ‘Pulsar’<br />
முகத்தை துப்பட்டாவில் மறைத்துக்கொண்டு அந்த தேவதை<br />
(இன்னும் என்ன தேவதை வேண்டிகெடக்கு?)<br />
அந்த வெள்ளை சுடிதார் போட்ட பொண்ணு பின்சீட்டில் அமர்ந்தாள்.</div><div style="line-height: 21px;"><br />
</div><div style="line-height: 21px;">வண்டி சீறிப்பாய்ந்தது E.C.R ல்…<br />
அடடா… Vada gone…</div><div style="line-height: 21px;"><br />
</div><div style="line-height: 21px;">‘ஏய்! குமார். பக்கத்துல நிக்கிற pink சுடிதார் எப்படி?’<br />
-கண்கள் மீண்டும் தூண்டில் போட,</div><div style="line-height: 21px;"><br />
</div><div style="line-height: 21px;">“எதுக்கு இன்னொரு ‘Apache’ல ஏறிப் போறதுக்கா?<br />
ஒழுங்கா T51 வருதானு பாரு. office போலாம்” மனதிற்குள் நான்…</div><br />
<div><br />
</div>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-55638123865786242242010-06-13T00:22:00.000+05:302010-06-13T00:22:18.125+05:30மனதின் தழும்புகள்...<div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">மனதில் காயங்கள் -<br />
சில உறவுகளால், சில வரவுகளால்,</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">காயங்கள் மறைந்தாலும், தழும்புகள் மனதிலே,</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">தழும்புகளை அவ்வப்போது விளையாட்டாய் சீண்டும் நினைவுகள்<br />
சீண்டலில் வலியாகும் தழும்புகள்,</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">நினைவுகளின் சீண்டலில், தழும்புகளின் வலியில்<br />
ரணமாகும் இந்த பாழாய்ப் போன மனது…</div>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-87780588351660575382010-06-13T00:21:00.000+05:302010-06-13T00:21:08.156+05:30தேவதை ஸ்பரிசம்…<div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">அழகியதோர் காலைப்பொழுது<br />
ஏனோ அன்று சூரியனுக்கு வெட்கம் தொற்றிக்கொள்ள<br />
கரு மேகங்களின் பின்புறமாக முகத்தை மறைத்துக்கொண்டது</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">கொஞ்சம் பொறுத்துக்கொள்! இதோ வந்து விடுகிறேன் - முத்தமிட<br />
மண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பும் மழை - தென்றலிடம்</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">மண்வாசனையும், ரம்மியமான சூழலும் மனதைச்சூழ<br />
பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் பயணிக்கலானேன்</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">நட்பு வட்டாரங்களுக்கு காலை வணக்கக் குறுந்தகவல் - கைப்பேசியில் பறக்க<br />
திடீரென முன்னிருக்கையில் ஒரு மின்னல்</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">எப்பொழுதும் நினைவுகளில் முதுகு மட்டும் காட்டும் தேவதை<br />
இன்று என் முன்னிருக்கையில், தேவதைகளின் வழக்கமான வெள்ளை சுடிதாரில்</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">‘இன்றாவது அவள் முகம் பார்த்தே ஆக வேண்டும்’<br />
மனது காற்றாடியாய் எங்கெங்கோ பறக்க,<br />
என்னையே அறியாமல் இருக்கையின் விளிம்பில் நான்</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">கட்டிவைக்கப்படாத அவள் கூந்தல் தென்றலுடன் கைகோர்க்க<br />
மெல்ல என் முகத்தில் அவை சீண்டத் துவங்கின</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">இந்த நொடியே என் உயிர் போகினும் மகிழ்ச்சியே!</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">‘இன்னும் 2 நிமிசம் இந்த ‘கப்ப’(gabbu) உள்ளே இழுத்தா நெஜமா உயிர் போயிடும்டா.<br />
யோசிக்க நேரமில்ல, டக்குனு முழிச்சிடு.<br />
முகத்தில் இருந்ததை விலக்கிவிட்டு விழித்தால்,<br />
அருகே படுத்திருந்த அறைத்தோழன் எழுந்திருக்கும்போது<br />
அவனது துவைக்காத போர்வையை என் முகத்தில் விசிறிவிட்டுப் போயிருக்கிறான்.</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">அடச்சே… அதெல்லாம் கனவா?</div>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-11259671809527159332010-06-13T00:12:00.000+05:302010-06-13T00:12:57.488+05:30இரண்டு கவிதைகள் - 2...<b><span class="Apple-style-span" style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-weight: normal;"></span></b><br />
<b></b><br />
<b><div style="display: inline !important; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: left;"><h5 style="display: inline !important; font-family: Georgia, Arial, serif; font-weight: normal; line-height: 1.4em; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><span style="font-family: 'book antiqua', palatino;"><span class="Apple-style-span" style="font-size: small;"><div><div style="display: inline !important; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: left;"><h5 style="display: inline !important; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><span class="Apple-style-span" style="font-weight: normal;"><span class="Apple-style-span" style="font-size: x-large;">மாடி வீட்டு மூன்றாம் பிறை…</span></span></h5></div></div><div><b><div style="display: inline !important; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: left;"><h5 style="display: inline !important; font-family: Georgia, Arial, serif; font-weight: normal; line-height: 1.4em; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><span style="font-family: 'book antiqua', palatino;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span></span></h5></div></b></div>அவளுக்கும் என்னைப் போல பயம்</span></span></h5></div></b><br />
<b><span class="Apple-style-span" style="font-size: x-large;"><span class="Apple-style-span" style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; font-weight: normal;"></span></span></b><br />
<b></b><br />
<b><div style="margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: left;"><h5 style="font-family: Georgia, Arial, serif; font-weight: normal; line-height: 1.4em; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><span style="font-family: 'book antiqua', palatino;"><span class="Apple-style-span" style="font-size: small;">எங்கே என்னுடன் பேசினால் காதல் வந்துவிடுமோ என்று!</span></span></h5><h5 style="font-family: Georgia, Arial, serif; font-weight: normal; line-height: 1.4em; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><span style="font-family: 'book antiqua', palatino;"><span class="Apple-style-span" style="font-size: small;">அதனால்தான் பொய்க்கோபத்துடன் முறைக்கின்றாள்<br />
என்னைக் காணும் போதெல்லாம்…</span></span></h5><div><span style="font-family: 'book antiqua', palatino;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br />
</span></span></div><div><span style="font-family: 'book antiqua', palatino;"><span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; font-weight: normal;"><h2 style="font-family: Georgia, Arial, serif; font-weight: normal; line-height: 1.4em; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><span class="Apple-style-span" style="font-size: x-large;">எங்கிருக்கிறாய் என் தேவதையே?</span></h2><div><br />
</div><div><div style="line-height: 21px;">என் நினைவுகள் முழுக்க நீதான் தேவதையே<br />
புறமுதுகு காட்டி சிரித்தபடி விளையாடுகிறாய்…</div><div style="line-height: 21px;"><br />
</div><div style="line-height: 21px;">உன் நினைவுகளில் நான் கிறுக்கும் கிறுக்கல்கள்கூட<br />
கவிதைகள் ஆகின்றன…</div><div style="line-height: 21px;"><br />
</div><div style="line-height: 21px;">அந்த கிறுக்கல்களை கிறுக்கும் இந்த கிறுக்கன்கூட<br />
கவிஞன் ஆகிவிட்டேன்…</div><div style="line-height: 21px;"><br />
</div><div style="line-height: 21px;">நினைவுகளில் என் காதலியாய்,<br />
எங்கோ யாருக்கோ(என் மாமனார் மாமியார்) மகளாய்…</div><div style="line-height: 21px;"><br />
</div><div style="line-height: 21px;">நினைவுகளில் முகம் காட்ட மறுக்கும் தேவதையே,<br />
உன் முகவரி தராவிட்டாலும் பரவாயில்லை<br />
நீ இருக்கும் திசை மட்டும் காட்டு-</div><div style="line-height: 21px;">அது போதும் எனக்கு அடுத்த கிறுக்கல்களைக் கிறுக்க...</div></div></span></span></span></div></div></b>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-62918398205921877922010-06-13T00:10:00.000+05:302010-06-13T00:10:01.546+05:30புது வரவு...<div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">கடவுள் மிகவும் நல்லவர்…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">புதிதாக நாங்கள் மாறியிருக்கும் அறைக்கு அருகில்<br />
மூன்று புதிய தோழிகள் அறிமுகமாகியிருக்கிறார்கள்.</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">கடவுள் மிகவும் நல்லவர்…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">அழகான பெண்கள் நான் இருக்கும் திசைப்பக்கம் கூட வரமாட்டார்கள்<br />
(எனக்கு மட்டும் அல்ல என் கல்லூரி ஆடவர்க்கே ராசி அப்படி - காலம் காலமாக)<br />
இந்த முறை (ஆச்சர்யமாக) சற்றே ராசியின் விதி தளர்ந்திருக்கிறது</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">ஸ்ருதி, சௌம்யா, ராகினி - என மூன்று தேவதைகள்<br />
3 பேருமே நன்கு படித்த, பட்டறிவு பெற்றவர்கள்.<br />
ஸ்ரு & ரா - இரண்டாம் வகுப்பையும், சௌ - மூன்றையும் வெற்றிகரமாக கடந்திருக்கிறர்கள்<br />
(Highly educated you know!!!)</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">கீ-கோ, ரிங்கா ரிங்கா ரோஸஸ், ஐஸ் பாய் போன்ற ஒலிம்பிக்குக்கே<br />
சவால் விடும் வீர விளையாட்டுகள்தான் மாலை வேளையில்</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">கோடை விடுமுறைக்கு எல்லோரும் ஊருக்கு போனதால்<br />
ஒரு வாரமாக சற்றே விரக்திதான்</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">பள்ளி துவங்கியதும் மீண்டும் துவங்கிவிடுவோம் எங்கள் ஒலிம்பிக்ஸை</div>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4129034046272901660.post-2438968993949689092010-06-13T00:07:00.000+05:302010-06-13T00:07:15.781+05:30தோள்(ழர்)கள்…<div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">அன்று…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">கஷ்ட__<br />
வார்த்தை முழுதாக முடிவதற்குள் அதை தீர்க்கவும்,<br />
தாங்கவும் ஓடோடி வந்தன தோள்கள்…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள அவர்கள் அன்றி வெறேது?</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">இந்த தோள்(ழர்)கள் தான் வாழ்க்கை… உலகம்…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">இன்று…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">சொல்லி அழுது… சாய்ந்து இளைப்பாற…<br />
கொண்டாடி மகிழ… பகிர்ந்து கொள்ள…<br />
பல பல விஷயங்கள் இருக்கின்றன,<br />
அன்று இருந்த தோள்கள், இன்று . . . ?!?!?!</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">இன்றும் அதே தோள்கள் அப்படியேதான் இருக்கின்றன,<br />
ஆனால், அலுவலகத்தில் பணிச்சுமைகளை சுமந்தபடி,</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">அப்பாக்களின் தோள்கள் ஓய்வெடுக்க வேண்டிய தருணம் இதுவென்று<br />
புரிந்துகொண்டு குடும்பச் சுமைகளை சுமந்தபடி…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">“என்னடா மாமு, Weekend movie போலாமா?”<br />
“Next week ல ஒரு Jolly tour போடுவோமா?”</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">“ஓ - போலாமே மச்சி” அது அன்று…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">இன்று அந்த கேள்விகள் கேட்கக்கூட ஆள் இல்லை,<br />
அப்படியே கேட்டாலும்,<br />
“Project - UAT போகுது மாப்ள. Saturday, Sunday Office போகணும்டா” இதுதான் இன்று…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">எனது தோள்களின் முழுவலிமை என்னவென்று இப்பொழுதுதான் புரிகிறது எனக்கு…</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;"><br />
</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">இதோ “Hi da” - OCS ல் நண்பன் அழைக்கிறான் ஏதோ விஷயம் பற்றி பேச,<br />
“Catch u later da. My TL calling. BYE”</div><div style="color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">- அனுப்பிவிட்டு கிளம்புகிறேன் பணிச்சுமையைத் தாங்க...</div>Kumar014http://www.blogger.com/profile/00753059371434252301noreply@blogger.com0