Wednesday 3 October, 2012

பிறழ்வு - ஒரு டிரை


நதியெனப் பரந்து, அருவியென வீழ்ந்து
பாறைச் சிதறல்களில் சிரம் வெடித்து வீழ்கிறேன்,
குருதிப் பள்ளங்களில்
ஆறுதல் தேடிய மடித் தூக்கங்களில்
தலை வருடும் சர்ப்பமென
விஷப் பற்களின் கீறல்கள்
ஆரத் தழுவும் நம்பிக்கைகளில்
கழுத்து நெரிக்கும் துரோகங்களென
பிணம் முளைக்கும் கரிசல் பூமி
மழலைத் தொடுதலென கூடு துளைக்கும்
தோட்டாக்களில் சிகரெட் புகையெனப் பிரியும்
உயிர் நாளங்கள்
உருக்கும் குளிர் போக்கிய போர்வைகளில்
சாம்பலாக்கும் கனலென மணக்கும்
நாளைய நினைவுகள்

Monday 1 October, 2012

திருட்டுத் தாண்டவம்...


எந்த விஷயம்னாலும் 15  நிமிசத்துல மறந்திடும் ஹீரோவுக்கு, நம்பர் 4 னு மார்க் பண்ணின வில்லனோட அடியாள் போட்டோவ வெச்சு அவனைத் தேடிப் போய் கொலை பண்றாரு சஞ்ஜய் - நம்பர் 5 எங்க இருக்கான்னு தகவல் சொன்னத வெச்சு ஹோட்டலுக்கு தேடிப் போய் கொலை பண்றாரு கண்ணு தெரியாத கென்னி.  நம்பர் 5 , 4 னு கணக்கு வெச்சு ஹீரோயினிய கொலை பண்ணின வில்லன்கள தேடித் தேடி கொன்னுட்டு, நம்பர் 1 வரவுக்காக காத்திருக்காங்க சஞ்ஜயும், சிவா @ கென்னி @ இன்னும் ரெண்டு பேரு மறந்து போச்சு. memory lossக்கு சஞ்ஜய் போலராய்ட் கேமாரால போட்டோ எடுத்து பேரு எழுதி வெப்பாரு, உடம்புல பச்சை குத்துவாரு - கண்ணு தெரியாத கென்னி எக்கொலேஷன்.

சஞ்ஜெய் ராமசாமிய பத்தி கிசு கிசு பரப்பின பொண்ண திட்டணும்னு அவரு போயிட்டிருக்கிற வழில, கால்வாரி கல்பனா - நடக்க முடியாத குழந்தைகளுக்கு உதவி பண்றத பார்த்ததும் லவ்வாகிப்போகுது. அடுத்து தமிழ்த் திரையுலக  சம்பிரதாயம் 1 படி ஒரு பாட்டு வரணுமே, 'ஒரு மாலை இளவெயில் நேரம்' - கல்யாணமே வேணாம்னு சொல்ற இன்டர்போல் ஆபீசர்(எதோ RAW ஏஜன்ட்டாம்) சிவக்குமார் நேரடியா பொண்ணுகிட்டவே பேசிடலாம்னு போகும் போது நாய்க்குட்டிகளுக்கு குடை குடுத்திட்டு, மழைல நனையுற மீனாட்சி மேல லவ் வருது - சம்பிரதாயம் 1 - 'அனிச்சம் பூவழகி ஆடவைக்கும் பேரழகி'.

ஏதோ கேக்கனும்னு வந்த மொபைல் கம்பெனி ஓனர் சஞ்ஜய், கல்பனாகிட்ட தன்னை நடிப்பு சான்ஸ் கேட்டு வந்த மனோகர்னு காட்டிக்கிறாரு - முதல் இரவுல பேசுறதே தப்பு, இதுல நீங்க சப்-இன்ஸ்பெக்டர்தானே னு கேக்குற மீனாட்சி கிட்ட ஆமா ஆமா னு மண்டைய ஆட்டி வெக்கிறாரு இன்டர்போல் ஆபீசர் சிவா. ஒரு வீடு வாங்கணும், அம்பாசிடர் கார் வாங்கணும்னு லட்சியமா இருக்குற கல்பனாவுக்கு ஹமாம்-ஸ்வீட் ஹோம்ல பரிசு விழுந்ததா ஒரு வீடு பரிசா கொடுக்கிறாரு சஞ்ஜய் - ஐ பவுண்டேசன் ஆரம்பிக்கிறதுதான் லட்சியம்னு இருக்கிற மீனாட்சியோட பெயிண்டிங்க்ஸ்லாம் ஏலத்துல விட்டு அவங்க ஐ பவுண்டேசனுக்காக டொனேசன் வாங்கித் தர்றாரு சிவா. 'நான் உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லணும்' சஞ்ஜய் லிப் மூவ்மென்ட்க்கு கல்பனா பேசுவா - 'உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்' சிவா லிப் மூவ்மென்ட்க்கு மீனாட்சி பேசுறா.

செகன்ட் ஹீரோயின் இன்ட்ரோ - சித்ரா, தமிழ் சம்பிரதாயம் 2 - 'எக்ஸ் மச்சி, ஒய் மச்சி, எப் எம் மச்சி' - சாரா விநாயகம்- 'யாரடி மோகினி (டப்பிங் பாட்டு)'. ஆமா எதுக்காக இந்த ஹீரோயின்? ஹீரோவோட ப்ளாஷ்பேக்லாம் யாரு கிளறி எடுக்கிறதாம்? தமிழ் சம்பிரதாயம் 3  படி முதல் ஹீரோயினிக்கே 3  பாட்டு, 2  சென்டிமென்ட் சீன்தான் ஒத்துக்குவாங்க. ரெண்டாவது ஹீரோயினிக்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? சாரா விநாயகம் - நீங்க வந்தா மட்டும் போதும். கல்பனா முதுகுல கொஞ்சம் தக்காளி சட்னி ஊத்தின வில்லன், இப்போ ஹீரோ - ஹீரோயின் படுத்துகிட்டே கண்ணும் கண்ணும் நோக்கியான்னு சோகமான ரொமான்ஸ் பிழிஞ்சிட்டு இருக்கும் போது 'டங்'னு தலைல தக்காளி சட்னி போட்டுடறான் வில்லன் - பாதி பாம் வெடிச்சு ஹீரோ - ஹீரோயின் படுத்துகிட்டே நோக்கியா பாட்டு பாடும் போது 'டமால்'னு மீதி பாம் வெடிச்சு ஹீரோயின் சிதறிப் போயிடறாங்க. (நமத்துப் போன வெடிகுண்டோ? இன்ஷ்டால்மென்ட்ல வெடிக்குதே?)

யார ஏமாத்தப் பாக்குற அங்க வில்லன் டபுள் ஆக்ட், அவன் வில்லன்னுதான் மொதல்லேர்ந்து காட்டுவாங்க. இங்க அப்படியா? அந்த படம் கூடதான் நல்லா இருந்திச்சு, சூப்பர் ஹிட்டா ஓடிச்சு. இந்தப் படம் ஊத்துகிச்சுதானே? அப்படின்னு கேப்பேன்னு நினைச்சீங்களா? அங்க தான் டைரக்டர்ரர்ர்று வெக்கிறாரு ட்விஸ்ட்ட. மேல்படிப்புக்காக ரஷ்யா போற கவுதம் சுப்பிரமணியம் அங்க ஒரு கொலை கேஸ்ல மாட்டிக்கிறாரு. மொழிப் பிரச்சினைக்கு உதவி செய்யிறதுக்காக ஆர்த்தி சின்னப்பா வர்றாங்க - ஏதோ ரகசிய ப்ளோ சார்ட் கண்டுபிடிக்கிறேன்னு உளவாளியா வர்ற சிவா லண்டன்ல தீவிரவாதியா புனைக்கப் பட்டு மாட்டிக்கிறாரு. அவருக்கு உதவி செய்ய வர்றவங்கதான் கீதா. இப்போ ட்ராக் கரெக்ட் ஆகிடுச்சா? இந்த வில்லன் அந்த வில்லனுக்கு ஒத்துப் போறானா? சொல்லப்போனா கவுதம்க்கு கூட கிராமத்து பிளாஸ்பேக் ஒன்னு இருக்கு ;)

சந்தானம் காமெடி இருந்தும் வேஸ்ட் பண்ணிட்டாங்கப்பா, எமி ஜாக்சனுக்கு இன்னும் கொஞ்சம் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கலாமேப்பா? அட யார்ரா  இவன், நானே லட்சுமி ராய்க்கு ஒரு குத்துப் பாட்டு கூட இல்லையே னு பீல் பண்ணிட்டு இருக்கேன், செகன்ட் பக்கெட்க்கு ட்ரீட் கேக்குற மாதிரி பேசிகிட்டு இருக்க. எவன்டா அவன் சிங்கம் படத்துல சூர்யா ஸ்டூல் போட்டு நடிச்ச மாதிரி போட்டோ அனுப்பினது? நீ உண்மையான போட்டோஷாப் டேவலப்பர்ணா இப்போ அனுப்பு சீயானுக்கு ஸ்டூல் போட்டு. இந்தப் பொண்ணு உசரத்துக்கு ஹீரோ புடிக்கனும்னா, சத்யராஜும் , அமிதாப் பச்சனையும் தான் புடிக்கணும்.

தாண்டவம் -- காசுக்கு தண்டம் (நன்றி வினய்  ;) )