Saturday, 19 June 2010

கேட்ட பாடல்…

“ஹாய் & ஹலோ. வெல்கம் டு வாழ்த்தலாம் வாங்க. நம்ம கூட பேச போற அடுத்த Caller” இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? ஆமாங்க தொ(ல்)லைபேசில பேசி பேசி பாட்டு போடுவாங்களே, அதைப் பத்தின பதிவுதான் இது.


முன்னாடி ஒரு காலத்துல தூர்தர்ஷன்னு ஒரே சேனல்தான் இருக்கும். ரிமோட்களெல்லாம் நிம்மதியா இருந்த காலம் அது. அப்போலாம் எங்க ஊர்லயே மொத்தம் 2 வீட்டுலதான் டிவி இருக்கும். Sutter வெச்ச Solidair டிவி நியாபகம் இருக்கா அதுதான். அப்புறம் ஊருக்கே பொதுவா பஞ்சாயத்து டிவி இருக்கும். ஊர்லயே 2 வீட்லனு சொன்னேன்ல, அதுல ஒண்ணு எங்க அத்தையாங்க வீடு. எல்லாரும் உக்காந்து பார்க்குற மாதிரி ஒரு இடத்துல டிவி இருக்கும். நிறைய பேர் பார்ப்பாங்க. எங்க அத்தை வீடுங்கிறதால நான் chairல உக்காரலாம், Volume குறைக்கலாம் கூட்டலாம். என்னோட மத்த நண்பர்களெல்லாம் பொறாமையா பார்ப்பாங்க. அந்த வயசுல அதுல ஒரு தனி பந்தா.


நானும் எங்க அக்காவும் ஸ்கூல் ஹோம்வொர்க்லாம் 7.30P.M மணிக்குள்ள எழுதிட்டு, 8.00P.M க்குள்ள சாப்பிட்டுட்டு அத்தை வீட்டுக்கு ஓடிருவோம். ம்ம்ம் சொல்ல மறந்துட்டேன், எங்க அத்தைக்கு 4 பொண்ணுங்க . ரொம்ப பொறாமைப்படாதீங்க எல்லாரும் என்னை விட பெரியவங்க 
. 7.55 க்கெல்லாம் அத்தை வீட்ல ஆஜர். அய்யாதான் டிவிய ஆன் பண்ணுவேன். 7.59க்கு செய்திகளுக்கு Count down ஸ்டார்ட் ஆனதுமே நானும் எங்க அக்காவும் ஒரு பந்தயம் கட்டுவோம் ‘இன்னைக்கு செய்தி வாசிக்கப்போற ரெண்டு பேருமே லேடீஸ்-னு நானும், இல்ல ரெண்டுமே Gentsனு எங்க அக்காவும். அப்படி ஒரு ஆண், ஒரு பெண்-னு பந்தயம் வெச்சா யார் மொதல்ல வணக்கம் சொல்வாங்கன்னும் சேர்த்து சொல்லணும்.

பந்தயத்துல யார் ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு இன்னொருத்தர் அடுத்த நாள் ஸ்கூல் போகும்போது ஜவ்வு மிட்டாய் வாங்கித்தரணும். அதுக்குதான் பந்தயமே. நிறைய தடவ நான்தான் ஜவ்வுமிட்டாய் வாங்குவேன். அக்கா வாங்குனாலும் பாதி தந்திருவா. (தரலைணா நானே புடுங்கிருவேன்னு தெரியும் அக்காவுக்கு). இது அத்தை வீட்ல.



வெள்ளிக்கிழமை ஆச்சுன்னா பஞ்சாயத்து டிவி பார்க்க போயிடுவேன். ஏன்னா 7.30க்கு ஒளியும் ஒலியும் போடுவாங்க. அதுல இன்னைக்கு ரஜினி பாட்டு போடுவாங்க, எம்.ஜி.ஆர் பாட்டு போடுவாங்கன்னு நண்பர்கள் கூட பந்தயம். இந்த பந்தயத்துல ஜெயிச்சா ஜவ்வு மிட்டாயில்ல, அடுத்த சனி ஞாயிறுல வாடகை சைக்கிள் எடுத்தா அதுல 2 ரவுண்டு ஓட்டத் தரணும். அதெல்லாம் ஒரு காலம். ப்ப்ச்ச்…


இப்போ எதுக்கு இந்த மொக்கைய போட்டேன்னா அப்போவெல்லாம் ஒளியும் ஒலியும்தான் பாட்டு போடுற ஒரே நிகழ்ச்சி. பழைய பாடல்களைக்கூட ஆட்டம் போட்டு ரசிச்சு பார்ப்போம். அப்புறம்தான் டிஷ் ஏண்டனா, கேபிள் டிவினு ஆக்கிரமிப்புகள் அதிகமாச்சு. கேபிள் டிவியெலாம் வந்த அப்புறம் எங்க வீட்லயே டிவி வாங்கிட்டாங்க. அப்போ எனக்கு பிடிச்ச நிகழ்ச்சி ‘பெப்ஸி உங்கள் சாய்ஸ்’. போன் பண்ணி உமா ஆண்ட்டிகிட்ட நமக்கு பிடிச்ச பாட்டு கேட்டா அவங்க அந்த பாட்டு போடுவாங்க.


அந்த நிகழ்ச்சி எங்க அம்மாவுக்கும் ரொம்ப பிடிக்கும். எல்லா பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும். ஏன்னா பெப்ஸி உமா வித விதமா அழகழகா புடவை கட்டிகிட்டு வருவாங்க. ஆனா அது எப்பவோ எடுத்துட்டு கொஞ்ச நாள் கழிச்சுதான் டெலிகாஸ்ட் பண்ணுவாங்க.


அப்புறம்தான் லைவ் டெலிகாஸ்ட் கான்செப்ட் வந்திச்சு. அவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு கால் பண்ணிட்டு நாம பேசுறத நாமளே கேக்க முடியாது. அதுவாவது பரவாயில்ல நாம கேக்குற பாட்டாவது போடுறாங்களானா அதுவும் கிடையாது.

நான் காலேஜ் ஹாஸ்டல்ல படிக்கும் போது, (நம்ம எப்போ படிச்சோம்) இருக்கும் போது lunch முடிச்சிட்டு மறுபடி க்ளாஸ் போறதுக்கு 10- 15 நிமிசம் டைம் இருக்கும். அந்த கேப்ல 2 பாட்டு கேக்கலாம்னு எஃப்.எம் போடுவோம். ‘கோடைப்பண்பலையில் இது கொடைக்கானல்’. 3 நிமிசம் விளம்பரம் ஓடும், அப்புறம் இந்த பாடலை விரும்பி கேட்ட நேயர்கள்னு 5 நிமிசத்துக்கு ஒரு பெரிய லிஸ்ட் படிப்பாங்க. அப்புறம் பாட்டு போடும்போது கிளம்பி க்ளாஸ் போயிடுவோம்.



லைவ் டெலிகாஸ்ட் வந்தாலும் வந்துச்சு, கூடவே ஸ்பான்சர்ஸ் - விளம்பரங்களும் வந்திருச்சு. முன்னாடியெல்லாம் நிகழ்ச்சிக்கு நடுவுலதான் விளம்பரம் போடுவாங்க. இப்போ விளம்பரங்களுக்கு நடுவுலதான் நிகழ்ச்சியே. அதுவும் கால் பண்ணினா எவ்ளோ நேரம் வெயிட்டிங்க்ல இருக்கணும் தெரியுமா. ஆனா பேசுறது என்னமோ 2 நிமிசம்தான்.  அதுவும் நாம கேக்குற பாட்டு கூட போட மாட்டாங்க . இப்போ இருக்கிற நிகழ்ச்சியெல்லாம் பெண்களுக்கு பிடிக்கிறதில்ல. ஏன் தெரியுமா? பெப்ஸி உமா அழகழகா புடவை கட்டிட்டு வருவாங்க பிடிச்சது, ஆனா இப்போ வர்றவங்கதான் டிரஸ்ஸே போடுறதில்லயே? அட ஒழுங்காவே டிரஸ் போடறதில்லைனு சொல்ல வந்தேம்ப்பா. எப்பவும் தப்பு தப்பாவே நினைக்கிறது.


அதுவும் காலையில 8 -10 வாழ்த்துக்கள் சொல்ற நிகழ்ச்சியிருக்கே. ரொம்ப மோசம், ‘அடுத்த காலர் பார்க்கலாம்னு’ சொல்வாங்க, பெயர் கேட்டுட்டு யாருக்கு வாழ்த்துக்கள்னு கேப்பாங்க. அவங்க சொல்லிகிட்டு இருக்கும் போதே கால் கட் பண்ணிட்டு, ‘கட் ஆய்டுச்சுனு; ஈஈனு பல்ல காட்டிட்டு பாட்டு போட்ருவாங்க. பாட்டும் முழுசா போட மாட்டாங்க, 2 லைன் போட்டுட்டு விளம்பரம் போட்ருவாங்க. நாஞ்சென்ஸ்… 


இப்படியே போச்சுன்னா கால் பண்றவங்க பெயர் மட்டும் கேட்டுகிட்டு ‘அவர் வாழ்த்தணும்னு நினைச்சவங்களுக்காக இந்த பாட்டு, இந்த பாட்டு போடணும்னு நினைச்சதுக்காக விளம்பர இடைவேளைனு’ கிளம்பிடுவாங்க. அதுவும் இல்லைனா Loud speaker போன்ல ரிங் அடிக்கிற சத்தம் மட்டும் கேட்க வெச்சிட்டு, ‘இதோ நமக்கு யாரோ ஒருத்தர் கால் பண்ண டிரை பண்றாரு, அவர் கால் பண்ணனும்னு நினைச்சதுக்காக பாடல் பார்ப்போம், பாடலுக்காக விளம்பரம் பார்ப்போம் கிளம்பினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல  


இப்போவும் பந்தயம் கட்டுவோம் ரூம்ல. ‘இன்னைக்கு VJ நல்ல ஃபிகர் வந்திருக்கும்னு. எங்க நடக்குது . தினமும் பந்தயத்துல தோல்விதான். மகாலக்ஷ்மி செல்லம் போனதுக்கப்புறம், திவ்யா அப்புறம் இப்போ நிஷா. ஏதோ இவங்களை நினைச்சு மனச தேத்திகிட்டு இருக்கேன். வேற என்ன பண்றது? 

மழையும் கொடூர யோசனைகளும்…

மழை வந்துச்சுன்னா மழையிலயிருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு ஏதோ என்னோட குட்டி களிமண்ணுல ச்சீ… மூளையில தோணின சில யோசனைகள்…


கொடூர யோசனை#1:


காலையில எந்திரிக்கும் போது மழை வந்துகிட்டு இருக்கு. ஆஃபீஸ் போலாமா வேணாமானு ஒரு பெரிய சந்தேகம். அது தினமும்தான் இருக்கும். இன்னைக்கு மழை வேற வருது. உடனே நீங்க உங்க TL, மேனேஜர், Team mates எல்லார்க்கும் கால் பண்ணி நான் இன்னைக்கு கண்டிப்பா ஆஃபீஸ் வருவேன்னு சொல்லிடுங்க. முடிஞ்சா வீட்டுக்கு வெளிய வந்து நின்னு சத்தம் போட்டு கூட சொல்லுங்க மழைக்கு கேக்குற மாதிரி. சொல்லிட்டு கபால்னு போய் இழுத்து போர்த்தி தூங்கிடுங்க.
நீங்க வெளிய வருவீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்து மழை ஏமாந்து போகும்ல?
************************************************************************************



கொடூர யோசனை#2:


ஐடியா 1னோட உல்ட்டா. கால் பண்ணி ‘இன்னைக்கு நான் ஆஃபீஸ் வர மாட்டேன்’னு சொல்லிட்டு திடீர்னு கிளம்பி ஆஃபீஸ் போய்டுங்க.
நீங்க இன்னைக்கு ஆஃபீஸ்க்கு லீவ்னு நினைச்சுகிட்டு இருந்த மழை ஏமாந்து போகும்ல?
************************************************************************************



கொடூர யோசனை#3:


மழை வந்ததும் போய் உங்க வீட்டு கதவு கிட்ட ஒளிஞ்சுக்கோங்க. அப்புறமா திடீர்னு வெளிய வந்து மழைய தொட்டு ‘ஐஸ், ஐஸ்’னு கத்துங்க. அப்போ மழையே மறுபடி ‘OUT’ ஆயிடும். அப்புறம் மறுபடி அது 1..2..3 count பண்ண போயிடும்ல?
************************************************************************************



கொடூர யோசனை#4:


மழையின் முக்கியமான நொக்கமே நம்மளை நனைக்கிறதுதான். அதனால நீங்க அஃபீஸ்க்கு கிளம்பி, நல்ல neatஆ அயர்ன் பண்ணி டிரஸ் போட்டுகிட்டு நேரா போய் ஷவர்ல நின்னோ இல்லையின்னா ஒரு பக்கெட் தண்ணிய எடுத்து ஊத்தியோ உங்களை ஃபுல்லா நனைச்சுக்கோங்க. துளி கூட நனையாம இருக்கக்கூடாது. ஓ.கே வா? அப்படியே கிளம்பினீங்கன்னா மொதல்லயே நனைஞ்ச உங்கள நனைக்க முடியாம மழை ஏமாந்து போகும்ல பாவம்? ஆனா நீங்க முழுசா நனையாம வெளிய வந்தீங்கன்னா மழைக்கு கொண்டாட்டம்தான்.
************************************************************************************



கடைசியா கொடூர யோசனை#5:


‘ஒழுங்கா போயிடு. இல்லையின்னா இந்த போஸ்ட்ட printout எடுத்து (மழையில) நனைச்சு உன்னை படிக்க வெச்சிருவேன்’னு மிரட்டுங்க. அப்புறம் பாருங்க……   
 இதைப்படிச்சதுமே உங்களுக்கு எனக்கு ஏதாவது குடுக்கணும் போல தோணும். உங்க அன்புக்கு நன்றி.மக்களே எதுவாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். தீர்த்துட்டா அப்புறம் பேச முடியாது பாருங்க.  ஹோக்கே???


இன்னும் இது மாதிரி பல பல யோசனைகள் இருக்கு. நீங்க ஓ.கே சொன்னா அடுத்தடுத்த பதிவுகள்ல வழங்கிடறேன். என்ன சொல்றீங்க? டீலா? நோ டீலா???

என் தேவதைக்கு…(cont)



ஊரெல்லாம் அடைமழை - அதன் விளைவால்
என் மனமெல்லாம் உன் நினைவு மழை
மழையில் நனைந்தபடி நடப்பது உனக்கு மிகவும் பிடிக்கும்
எனக்கும்தான் - உடன் கைகோர்த்து நடப்பது நீயென்றால்…

*************************************************************


இதோ இப்பொழுதும் மழையில் நனைந்தபடி நடக்கிறேன்
ஆனால்,”அவளின்றி நீ மட்டும் ஏன் தனியே?”
என் ஒவ்வொரு மழைத்துளியும் என்னைத்
தொடவில்லை - சுடுகிறது…
*************************************************************



எப்போதும் நடக்கையில் பொது இடமென்று
கை மட்டும் கோர்த்து நடப்பாய்
மழையில் நடப்பதென்றால் மட்டும் தோள் சாய்வாய்
அதற்காகத்தான் சரியாக 5 அடி 5  அங்குலமே வளர்ந்தாயோ?
உன் சிரம் என் தோள் சாயும் உயரத்திற்கு?

*************************************************************


“மழை வரும் போல இருக்கு. குடை எடுத்திட்டு வரேன்”னு
சொன்னேல - எங்கடா? என்றேன் நான்.
“இதோ இங்கே” என சிரித்தபடி போர்த்தினாய் துப்பட்டாவை
தூறல் ஆரம்பித்ததும் நடந்தோம் சிறிது தூரம்
“குளிருதுப்பா” என நெருங்கினாய் என்னருகே
அங்கே நம்மிடையே புகுந்து வெளியேற முயன்ற
காற்றும் தோற்றுத்தான் போனது! ‘குளிருக்கு நன்றி’



உறவுகளுக்கும் ரத்த பாசங்களுக்கும் தர விருப்பமில்லை
உனக்கு மட்டும், உனக்காக மட்டுமே தருவதே என் விருப்பம்
என்னிடமிருந்தால் பாசத்தில் தந்துவிடுவேன் - அதனால்

நீயே பத்திரமாக வைத்துக்கொள் எனது இதயத்தை
நான் வேண்டுமானால் மற்றவர்களிடம் பொய் சொல்லிக்கொள்கிறேன்
‘அதை துலைத்துவிட்டேன். துலைத்த இடம் மறந்துவிட்டேன்’  என
#############################################################

மறக்க முடியா நிகழ்வு எதுவென கேட்பவர்களுக்கு
எத்துணைதான் சொல்வது? உன்னுடனிருந்த ஒவ்வொன்று நொடியையும்?

வேண்டுமானால் கடைசியாக நடந்தது என இதைச் சொல்லிவிடவா?

சென்ற வாரம் உலகம் அழிவதைப் பற்றி சொல்லும் திரைப்படத்திற்கு
இரவுக்காட்சிக்கு ‘தேவி’ திரையரங்கம் போய் வந்ததை?

திரைப்படம் முடிந்து நள்ளிரவு 1 மணிக்கு
யாருமற்ற மவுண்ட் ரோட்டில் நீயும் நானும் மட்டும் பயணிக்க
இரவு பெய்துவிட்டு போன மழை குளிர் காற்றை மிச்சம் விட்டுப் போயிருக்க

வேகமாகப் போனால் உன்னுடனான பயணமும்
வேகமாய் முடிந்திடுமே என மிதவேகத்தில் பயணம் தொடர

எதுவும் வேண்டாமென சிகப்பு விளக்குமின்றி,
எது வேண்டுமானாலும் செய்யென பச்சை விளக்குமின்றி,
அழகாய் காதல் செய்யென மஞ்சள் விளக்குமட்டும்
அணைந்து அணைந்து எரிந்தபடி சிக்னல்களும் சிம்பாலிஸம் காட்ட

குளிரை விரட்டுவதாய் (குளிருக்கு நன்றி) மிக லாவகமாய்
நீ இறுக்கி அணைத்த போது உன் ஸ்பரிசமும் கதகதப்பும்
போதும் எனக்கு என் மீதான் உனது காதலை புரிந்து கொள்ள…

என் தேவதைக்கு…

ஆனாலும் நீ கொடுமைக்காரி…

சாப்பிட சரியாக 3 நிமிடமே தருகிறாய்,
அடுத்த நொடியில் அழைப்பு - “இன்னுமா சாப்பிடற?”
சற்று உனது பாசக்கொடுமையை தளர்த்து
உன்னுடன் நள்ளிரவு தாண்டியும் பேசுவதற்காகவாவது
சற்று அதிகமாக சாப்பிட்டுக்கொள்கிறேன்


###


இந்த விளையாட்டு எனக்குப் பிடிக்கவேயில்லை செல்லம்
நமது ஒவ்வொரு சந்திப்பிற்கும் வீட்டில்
எனது மாமனார் மாமியாரிடம் நீ பொய் சொல்வதும்,
உனது மாமானார் மாமியாரிடம் நான் பொய் சொல்வதும்.
என்றுதான் முடிவுறும் இந்த பொய் விளையாட்டு?


###


உன்னிடம் பிடிக்காதது-
எவ்வளவு முத்தக் கோரிக்கைகள் கேட்டாலும் நிராகரிப்பது
உன்னிடம் பிடித்தது-
நீ மட்டும் கோரிக்கையோ அறிவிப்போயின்றி எனக்கு தருவது
அதென்ன வாங்குவதை விட தருவதில் உனக்கு அப்படியொரு இன்பம்?


###


நமது கடைசி சந்திப்பில்
புறப்படும்போது கேட்டாய், “உன்னை கிள்ளிக்கட்டுமா என்று?”
வேண்டாம் வலிக்கும், எனக்கல்ல உன் செல்லத்திற்கு என்றேன்
மிகவும் வற்புறுத்தினாய்
நானும் “சரி ஒரே முறை மட்டும்” என சம்மதித்தேன்
உதட்டால் உதடு கிள்ளுவாய் என அறியாமல்
என் அறிவை என்ன சொல்ல என் கள்ளி?



Sunday, 13 June 2010

இரண்டு கவிதைகள் - 3...

தேவதை விளையாட்டு...



நேற்று நீ கேட்டதற்காக திடீர் சந்திப்பு
என்னைப் பார்த்ததில் உனக்கு அவ்வளவு மகிழ்ச்சி
ஐஸ்கிரீம் பார்த்த சிறுபிள்ளை போல…

போன சனிக்கிழமை முழுக்க உன்னுடன் ஊர் சுற்றியது
எதுவுமே நடக்காதது போல, வெகுநாட்கள் கழித்து பார்த்தது போல
இது என்ன புதிதா? ஒவ்வொரு முறையும் நீ இப்படித்தான்

கைகோர்த்து நடந்தோம். 5 நிமிட நடையில் சேரும் இடம் அது
ஆனால் 30 நிமிடங்களாக்கினாய் நடையை…
அந்த வித்தை உனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று

தெருவில் மற்றவர்கள் கண்ணிலோ பொறாமைப்பெருக்கு…
வழக்கமான நமது மரத்தடியில், நான் அமர்ந்தேன்
என் தோள் சாய்ந்தபடி நீயும் அமர்ந்தாய்

சிறிது நேர மவுனம், பிறகு வெகு நேரம் பேச்சு
அனைத்தையும் ரசித்தபடி உன்னுடன் பேசிக்கொண்டிருந்தேன்
பிறகு பிரிய மனமின்றி இருவரும் அவரவர் உறைவிடம் சேர்ந்தோம்

இன்று காலையில்,
“இவனுக்கு முத்திருச்சுடா. ராத்திரி முழுக்க என்னை
பிராண்டிட்டே இருந்தான். தனியா ஏதோதோ பேசினான்டா.
சீக்கிரமே கீழ்ப்பாக்கம் கூட்டிட்டு போகணும்” - அறைத்தோழன் கூற்று

பாவம் அவனுக்கெப்படி தெரியும் தேவதையே? நேற்று நீ என்னுடன் விளையாடியது?
உன் நினைவுகளின் விளையாட்டால் எனக்கு புதிய பெயர் “பைத்தியக்காரன்”

என்னவள்...


உனக்காக எழுதி எழுதித் தீர்ந்துவிட்டதடி
எனது குறிப்பேட்டின் பக்கங்களும் பேனா மையும்,

ஆனால் உன் கண்கள் என்னுள் உண்டாக்கிய தாக்கத்தால்
நான் கிறுக்கிய வரிகளே இன்னும் முடியவில்லையடி

உன்னை முழுக்க கவிதைகளால் கிறுக்கித்தள்ளினால்???
நிச்சயமாய் போதாது, குறிப்பேட்டின் பக்கமோ, பேனா மையோ மட்டுமல்ல
எனது ஆயுளும்தான்,

உனது கண்கள் கவிதையாகவே எனது ஆயுளில் மூன்றில் ஒன்று தீர்ந்துவிட்டதடி
உன்னை முழுவதுமாக கவிதையாக்க எனக்கும் ஆசைதான்
பொறாமை பிடித்த கடவுள் சதி செய்கிறாரே? நான் என்ன செய்ய?

அப்படி நிகழுமெனில் அந்த பொறாமைக் காரனிடம் நிச்சயம் மன்றாடுவேன்
“நீ பூமிக்கு அனுப்பி வைத்த தேவதைக்கு
கடிதம் ஒன்று அனுப்ப வேண்டும்.
மேலோகத்தில் ஒரு தபால் நிலையம் உருவாக்கு” என்று

சாலையோர தேவதை...

நான் வேண்டாமென்றாலும் என் கண்கள் நிறுத்தியதேயில்லை,
எனக்கான தேவதையைத் தேடும் படலத்தை…

அன்றும் அப்படித்தான்-

எங்களது பேருந்து நிறுத்தத்தில் வெள்ளை சுடிதாரில் ஒரு தேவதையைக் காட்டியது
சாலையின் எதிர்புறம் அவள் - மறுபுறம் நான்

நினைவுகளில் மனம் எங்கெங்கோ பறக்க
பார்வை அம்புகள் மட்டும் அவள் மேலே…

எல்லா தேவதைகளுக்குமே ஒரு ஒற்றுமை,
தன்னைப் பார்க்கும் அழகான ஆண்களை (புரியுது)                                        - சுமாரான ஆண்களை (சரி விடுங்க)தன்னைப் பார்க்கும் ஆண்களை (இப்போ சந்தோசமா?) பொய்க்கோபத்துடன் முறைப்பதில்,

ஆனால் இந்த முறைப்புதான் முதல் கட்ட வெற்றி…

இப்படியே ஐந்து நிமிடம் கழிய, திடீரென வந்து நின்றது ஒரு ‘Pulsar’
முகத்தை துப்பட்டாவில் மறைத்துக்கொண்டு அந்த தேவதை
(இன்னும் என்ன தேவதை வேண்டிகெடக்கு?)
அந்த வெள்ளை சுடிதார் போட்ட பொண்ணு பின்சீட்டில் அமர்ந்தாள்.

வண்டி சீறிப்பாய்ந்தது E.C.R ல்…
அடடா… Vada gone…

‘ஏய்! குமார். பக்கத்துல நிக்கிற pink சுடிதார் எப்படி?’
-கண்கள் மீண்டும் தூண்டில் போட,

“எதுக்கு இன்னொரு ‘Apache’ல ஏறிப் போறதுக்கா?
ஒழுங்கா T51 வருதானு பாரு. office போலாம்” மனதிற்குள் நான்…


மனதின் தழும்புகள்...

மனதில் காயங்கள் -
   சில உறவுகளால், சில வரவுகளால்,
காயங்கள் மறைந்தாலும், தழும்புகள் மனதிலே,
தழும்புகளை அவ்வப்போது விளையாட்டாய் சீண்டும் நினைவுகள்
    சீண்டலில் வலியாகும் தழும்புகள்,
நினைவுகளின் சீண்டலில், தழும்புகளின் வலியில்
    ரணமாகும் இந்த பாழாய்ப் போன மனது…