Friday 28 May, 2010

நினைவுகள்…


 பழைய கல்லூரி நண்பர்களைப் பிரிந்த ஒரு மதுரை(பாச)க்கார பயலின் குறிப்புகளில் இருந்து:

திங்கட்கிழமை காலை 8:15., நான் வழக்கம்போல பஸ்ஸுக்காக காத்துகிட்டு இருந்தேன் ஆபிஸ் போறதுக்கு, முன்னாடியும் இது மாதிரி காத்துகிட்டு இருந்திருக்கேன் டவுன் பஸ்ஸுக்காக., ஓரு வருசத்துக்கு முன்னாடி. காலேஜ் போறதுக்கு, பெரியார் பஸ்ஸ்டேண்ட்ல பசங்கலோட 76 நம்பர் பஸ்ஸுக்கு., எவ்வளவோ விஷயம் மாறிடுச்சுடா. என் வாழ்க்கைல( சட்டை கலர், செருப்புல இருந்து ஷூ, etc..),சத்தமா பேசியே ரொம்ப நாள் ஆச்சுடா, போக போக சிரிக்க கூட மறந்துருவேன் போல.,

எனக்கு மேல இருந்து சூரியனும் வானமும் என்னை பார்த்து சிரிக்கிற மாதிரியே இருக்குடா. அது தான் ஒரே சாட்சி எனக்கு நம்மோட 4 வருச காலேஜ் லைஃப்க்கு. எனக்கு இருக்குற ஞாபக மறதில பல விஷயம் மறந்தே போச்சு. முன்னாடி எல்லாம் அப்பா தர்ற 300ரூபா காசு நம்மல பெரிய பணக்காரன்னு நினைக்க வைக்கும். ஆனா இப்போ எதுவும் பத்த மாட்டேங்குதுடா..
உண்மைய சொல்லனும்னா நான் ஒரு நாளைக்கு 100 பேரையாவது பார்க்குறேன், பேசறேன். ஆனாலும் தனியா இருக்குற மாதிரி தான்  ஃபீல் பன்றேன்டா. நம்ம HOD மாதிரி ஒரு மேனேஜரும், நம்ம நரசிம்மன் சார் மாதிரி PLம், JP சார் மாதிரி ஒரு T L ம் கிடைக்கல டா. எத்தனை நாளுக்கு தான் 
நானும் அவங்கள வேலை பார்க்குற மாதிரியே ஏமாத்த போறேனோ தெரியல?

கொஞ்ச நேரத்துல கம்பெனி பஸ் வந்துருச்சு, ஏறி உக்கார்ந்தேன். அதே 76 பஸ் மாதிரி கடைசி கார்னர் சீட், ஜன்னல் பக்கத்துல. இன்னும் ஒரு மணி நேரம்  ட்ராவல். என் பக்கத்துல யாருன்னே தெரியாத ஒருத்தன் உக்காந்தான். அவனுக்கு தமிழ் தெரியாதுன்றது பலிச்சுனு தெரியுது. அவன்கிட்ட என்னத்த பேசுறது? நான் என் மொபைல்ல பாட்டு கேக்க ஆரம்பிச்சுட்டேன். நாம எப்டிடா காலேஜ் போனோம்? எல்லாரும் நம்ம காலேஜ் பசங்க. அதுவும் அந்த FINAL YEAR பஸ்ல, கண்டக்டர், ட்ரைவர் கிட்ட கத்தி ஆட்டம் போட்டு திட்டு வாங்கினது, வசிரோட டைமிங் சென்ஸ் இல்லாத காமெடி, சந்ருவோட மொபைல்ல பாட்டு கேட்டுட்டு அவனயே ஓட்டிட்டு வர்ரது, கலைவாணனோட சிரிப்பு. எப்படா அது நமக்கு திருப்பி கிடைக்கும். 76நெம்பர் பஸ்ல நாம சத்தமா சிரிச்சா தானே பஸ் ஃபுல்லா நம்மல திரும்பி பார்க்கும். ஆனா இங்க எல்லாம் பஸ்ல பேசினாலே திரும்பி பார்க்குறாங்க..

நம்மலோட காலேஜ் லைஃப் எப்படி இருந்துச்சுடா? நெனைச்ச உடனே நாம லீவ் போட்டுக்கலாம். இங்க எல்லாம் லீவ் அப்ளை பன்னனுமாம், அத மேனேஜர் அப்ரூவ் பன்னனுமாம். இப்டிலாம் நம்ம காலேஜ்ல கேள்வி பட்டு இருக்கோமா?

கேபின்னு ஒரு மேட்டர் இருக்கு, குருவி கூடு மாதிரி. ஒவ்வொரு கேபின்லயும் ஒரு சிஸ்டம் இருக்கும். தனியா உக்காந்து இருக்கேன்டா அதுல. கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் யாருமே தெரிய மாட்டாங்க. இத கூட அந்த கூண்டுல இருந்துதான் டைப் பண்றேன். காலேஜ்ல எப்பயும் நம்மல சுத்தி ஒரு கூட்டம் இருக்குமே, மதியம் நாம லன்ச் எப்டி சாப்டுவோம்? அடிச்சி, புடிச்சு, ஒரு டிபன் சாப்பாட 7-8 பேரு சாப்டது, கேண்டீன்ல ஒரு செட் பரோட்டாவ கூட்டமா பிச்சு இளுக்கறது. இங்கலாம் தனியா சாப்ட போறேன்டா. சாப்பாடு நல்லாதான் இருக்கும், ஆனா ஏன்னு தெரியல சாப்பாடு தொண்டைல இறங்கவே மாட்டேங்குது. கொஞ்சமா சாப்டதுமே வயிறு நெறைஞ்ச மாதிரி தோணும்.

காலேஜ்ல நாம சாப்டுட்டு வந்து HOD இல்லனா சதீஸ் சார் க்ளாஸ்ல எப்டி தூங்குவோம்? இங்க எல்லாம் அது முடியாது டா. இப்போ எல்லாம் நான் யாரையுமே ஓட்ரது இல்லடா. காலேஜ்ல எவண்டா சிக்குவான், அவன ஓட்டலாம், அன்னைக்கு பொழுது போய்டும்னு நெனைப்போம்ல. ஆனா இங்க எல்லாம் எவனாவது ஒருத்தவன் தெரிஞ்சவன் இருப்பானா, பேசறதுக்குனு நிலமை ஆய்டுச்சுடா. இப்போ எல்லாம் வாட்ச் ரொம்ப ஸ்லோவா ஓடுற மாதிரி இருக்குடா..
காலைல கேபின்ல நுழைஞ்சதும், பக்கத்துல இருக்குற கொலீக்ஸ் "Good Morning" சொல்லுவாங்க. Weekend என்ன பண்ணேனு கேப்பாங்க? நானும் "Nothing Special" னு சொல்லுவேன். பதிலுக்கு நானும் "நீங்க என்ன பண்ணீங்க?" னு கேப்பேன். அவனும் "Nothing Special"னு சொல்வான். நம்ம காலேஜ்ல என்னைக்காவது இந்த "Nothing Special"ன்ற வார்த்தைய யூஸ் பண்ணியிருக்கோமா?
அத விடு. முன்னாடி எல்லாம் 'Weekdays,Weekend' நாம பிரிச்சு பார்த்து இருக்கோமாடா? எல்லாம் நமக்கு ஒன்னுதானடா?

அப்ப எல்லாம் என் மொபைல்க்கு நெறைய மெஸேஜ் வரும். யாராவது மொக்கை மெஸேஜ் அனுப்பினா அத படிக்க கடுப்பா இருக்கும். ஏன்டா மொக்கை பொட்றேனு, அனுப்பிவவன திட்டுவேன். ஆனா இப்போ எல்லாம் எவனாவது மொக்கை மெஸேஜ்ஜாவது அனுப்ப மாட்டானானு ஆயிருச்சுடா என் நிலைமை.

 கண்டிப்பா நம்ம வாழ்க்கைல எல்லாரும் பழைய ஃப்ரண்ட்ஸ பிரிஞ்சு தான் ஆகனும். புது ஃப்ரண்ட்ஸும் கிடைப்பாங்க. ஆனா நம்ம க்ளாஸ் ஃப்ரண்ட்ஸ் மாதிரி நமக்கு அவங்ககிட்ட ஒரு ஃபீல் (உரிமை) இருக்காது. இங்கயும் எனக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க, ஆனா பழைய ஃபீலிங் தான் வரமாட்டேங்குது.

எப்படியோ,இது தான் வாழ்க்கை. வாழ பழகிக்கணும் இந்த Corporate cultureல.
சாயங்காலம் 5 மணி ஆச்சு. அப்படியே காபி குடிக்க போனா மிச்சமுள்ள நேரத்தையும் ஓட்டிடலாம். இன்னைக்கு நான் பண்ண உருப்படியான விஷயம் இத டைப் பண்ணதுதான். நான் என்னமோ ப்ராஜெக்ட் டாக்குமெண்ட் டைப் பண்றதா எல்லாரும் நெனச்சுட்டு இருப்பாங்க.  கம்பெனில நெறைய பேர் இப்டிதான் வொர்க் பண்றாங்க.

எப்டியோ Monday முடிஞ்சது. இன்னும் 4 நாள் இருக்கு அந்த "Nothing Special" Weekendக்கு. நான் 
கிளம்பறேன் Bye BYe with Tears…

P.S: இது எனக்கு என் நண்பன் அனுப்பியது. அவனது அனுமதிக்கு பிறகுதான் இங்கு உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்…

No comments:

Post a Comment